* பொய் பேசுவதால் மனிதன் பழிக்கு ஆளாக நேரிடும். ஆனால், உண்மை பேசுபவனோ நிலைத்த புகழ் பெறுவான்.
* விவேகம் என்னும் நல்லறிவு யாருக்கும் அவ்வளவு எளிதில் உண்டாவதில்லை.
* மனதில் அச்சம் தலை துாக்கி நிற்கும் வரை மனிதன் அடிமையாக வாழ வேண்டியிருக்கும்.
* தன்னம்பிக்கை இல்லாதவன் புதிய முயற்சிகளில் ஈடுபடத் தயங்கிக் கொண்டே இருப்பான்.
* போதும் என்ற மனம் படைத்தவன் திருப்தியுடன் வாழ்வதோடு, பிறர் வாழவும் துணையாக நிற்பான்.
மகாவீரர்