அம்மாவின் அன்பை உணர்த்துவதில் உணவுக்கு முக்கிய பங்குண்டு. உணவும், மன உணர்வும் நெருங்கிய தொடர்பு கொண்டவை. உணவே நம் மன உணர்வாக மாறுகிறது. மற்றவர் கொடுத்ததை சாப்பிடும் போது சிலர், 'இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு' என சொல்வதுண்டு. 'அன்னையோடு அறுசுவை உண்டி போம்' என அம்மாவின் அருமையைச் சொல்கிறார் பட்டினத்தார்.
இதனடிப்படையில் அம்மையப்பராக வீற்றிருந்து உலகைக் காக்கும் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.
ஐப்பசி பவுர்ணமியன்று உச்சிக்கால பூஜையின் போது இதை நடத்துவர். 'அன்னம் பரப்பிரம்ம சொரூபம்' என சோற்றை கடவுளின் வடிவமாகப் போற்றுவர்.