1. சிவ சின்னங்களாக போற்றப்படுபவை ........
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்.
2. கார்த்திகை சோமவார விரத பலன்..................
மனநலம், உடல்நலம், ஆன்மபலம்
3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.......
தட்சிணாமூர்த்தி.
4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்? .......
திருப்பெருந்துறை ( ஆவுடையார்கோயில் )
5. காலனை உதைத்த காலசம்ஹாரமூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.......
திருக்கடையூர்
6. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர் ....
திருமூலர்.
7. முக்திவாசல் என போற்றப்படும் திருத்தலம்........
திருவெண்காடு (நாகப்பட்டினம் மாவட்டம்)
8. கார்த்திகை சோமவாரத்தில் ........... அபிஷேகம் நடக்கும்
சங்காபிஷேகம்
9. திருவண்ணாமலையின் உயரம்......
2,665 அடி.
10. சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்........
கோச்செங்கட்சோழன்.