* சச்சரவில் இருந்து விலகி நில்லுங்கள். அதுவே வளர்ச்சிக்கான வழியாகும்.
* உன்னுடைய கண் உடலில் தீபமாயிருக்கிறது.
* வாய்ப்பேச்சு பலன் தராது.
* உங்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு.
* மனசஞ்சலம் கொண்டவன் காற்றால் அலைக்கழிக்கப்படும் கடல் அலை போல இருக்கிறான்.
* கோபம் வேண்டாமே.
* கணவர்களே! மனைவியை காதலியுங்கள்.
* உன்னிடம் கடன் கேட்க வருபவரை பார்த்து முகத்தைத் திருப்பாதே.
* தீய மனம் உள்ளவன் சத்தியத்தை விரும்புவதில்லை.
* ஒருவரின் குறையை பார்க்காமல், நிறையை மட்டும் பாருங்கள்.
* கோபத்தை அடக்குபவனே சிறந்தவன்.
* பிறரிடம் அன்பாக பேசுங்கள்.
* நல்லவர்கள் நல்லதை மட்டுமே செய்வர்.
- பொன்மொழிகள்