மனிதனுக்கு தேவையான பிராணவாயு, உணவு பொருட்களை மரமானது தருகிறது. மரங்களின் அழிவு மனிதனின் அழிவுக்கு சமம். இப்படிப்பட்ட மரங்கள் நமக்கு பல்வேறு விதங்களில் பயன்படுகிறது.
* புவி வெப்பமயமாதலை தடுக்கிறது.
* காற்றில் ஆக்ஸிஜன் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
* அனைத்து உயிரினங்களுக்கும் நிழல் தருகிறது.
* பறவைகளுக்கு வீடாக உள்ளது.
* நீர் சுழற்சியின் அங்கமாக விளங்குகிறது.
மனித கலாசாரத்தின் ஆரம்பம்
தொட்டே மரங்களின் துணை கொண்டு வீடுகட்டும் பழக்கம் உள்ளது. பேப்பர், எரிபொருள் என்று தேவைகளுக்காக மரங்களை வெட்டும் பழக்கம் தற்போது அதிகமாக உள்ளது.
நிழல் தரும் மரத்தை தேவை இல்லாமல் வெட்டுபவன் நரகத்தில் தலைகீழாகத் தொங்க விடப்படுவான்.