* இறைவன் யாரிடமும் பாகுபாடு பார்ப்பதில்லை.
* செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகிறது.
* வீண் செலவு ஏற்பட்டாலும் அதை கணக்கில் வையுங்கள்.
* வானுலகில் உள்ளங்கள் மட்டுமே பார்க்கப்படுகின்றன.
* பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நற்பண்புகளில் முதற்படி.
* மறுமை நாளில் வாழ்நாள் முழுவதும் வீணாக்கி விட்டோம் என வருத்தப்படாதீர்கள்.
* பெண்களை யாரும் குறைவாக நடத்தாதீர்கள்.
* விருப்போடு ஒருவர் கல்வி கற்க உதவி செய்யுங்கள்.
* நடக்கும் செயல்களில் அனைத்தையும் இறைவன் நடத்துகிறான் என நம்பிக்கை கொள்ளுங்கள்.
- பொன்மொழிகள்