* சிறியவர்களுக்கு நற்பண்புகளை கற்றுக் கொடுங்கள். அவர்களது எதிர்காலம் ஜொலிக்கும்.
* வேலை செய்யும் இடத்தில் உண்மையாக இருங்கள். உயர்வு உறுதி.
* கிடைக்கும் நேரத்தை நல்லவற்றிற்கு பயன்படுத்துங்கள்.
* நற்செயல்கள் செய்ய மனதில் ஏக்கம் வர வேண்டும்.
* ஆடம்பரத்திற்காக ஆடைகளை அணியாதீர்கள்.
* பிறரின் சிந்தனையை துாண்டுவது பெரிதல்ல. அவை நல்லவிதமாக இருக்க வேண்டும்.
* உறவினர்கள் அறியாமல் செய்த தவறை மன்னித்து விடுங்கள்.
* பிறர் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் ஒருநாளும் கெட்டுப்போவதில்லை.
* கூடவே இருந்து ஒருவர் துரோகம் செய்தால் அவரை தர்மம் தண்டிக்கும்.
-பொன்மொழிகள்