* பிறரது இன்பத்தை கண்டு மகிழ்வதே பெரும்புண்ணியம்.
* பணம் இல்லாமல் வாழ முடியாது. அதே சமயம் கஞ்சனாக இருக்காதே.
* உணவிலும், உடையிலும் எளிமையாக இரு.
* சம்பாதிக்கும் பணத்தில் இரண்டு சதவீதமாவது நன்கொடையாக கொடு.
* எதிராளி பத்து வார்த்தை பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசு.
* பிறர் துன்பம் கண்டு மகிழ்வது பெரும்பாவம்.
* நல்லதோ, கெட்டதோ உனக்குரிய வினைப்பயனை நீ அனுபவித்தே ஆக வேண்டும்.
* பணியில் கவனம் செலுத்து. ஆனால் ஆழ்மனம் கடவுளை சிந்திக்கட்டும்.
* யாரிடமும் சண்டையிடாதே. உன்னை விமர்சிக்கும் இடத்தை விட்டு விலகிச் செல்.
* தாய், தந்தையின் அன்புக்கு இணையில்லை. கடவுளின் அன்பும் அது போலவே.
* கடவுள் உன்னிடம் பொறுமை, நம்பிக்கை என்னும் காணிக்கைகளையே எதிர்பார்க்கிறார்.
* இன்பம், துன்பம் மாறி மாறி வரும். ஆனால் யாருக்கும் நிலைத்திருப்பதில்லை.
* மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் காரணம், அவரவர் செய்த பாவ புண்ணிங்களே
* கடவுள் மீது கவனத்தை செலுத்து. துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவாய்.
* போலி கவுரவத்தால் வாழ்வை வீணாக்காதே.
* பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவு. நெருக்கடி நேரத்திலும் விவேகமாக இரு.
சொல்கிறார் ஷீரடி சாய்பாபா