* எதையும் உடனுக்குடன் செய்து முடித்தால் வெற்றி நிச்சயம்.
* குழந்தைக்கு கல்வியுடன் விளையாட்டையும் சேர்த்து சொல்லிக்கொடு.
* ஒருவர் கஷ்டப்படும்போது அவருக்கு ஆறுதலாக பேசுவதும் தர்மம்தான்.
* எதிலும் நம்பிக்கையுடன் முயற்சி செய். வெற்றி கிடைத்தே தீரும்.
* உதவி செய்ய எவ்வளவு பேர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருக்க வேண்டும்.
* பெற்றோர் தேடிய செல்வத்தில் வாழாதே. சொந்தமாக உழைத்து சாப்பிடு.
* அறிவு, செல்வம், தைரியம் ஆகிய மூன்றும் உனக்கு அவசியம்.
* எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார்.
* எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு உதவினால் நீயே உயர்ந்தவன்.
* எந்த ஏற்றத்துக்கும் ஒரு இறக்கம் உண்டு. எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு.
* விருந்தினர் போல் நீயும் உலகில் சிறிது காலமே தங்க வந்திருக்கிறாய்.
* பெண்களின் பங்களிப்பு இருந்தால்தான் குடும்பம் முன்னேறும்.
* மனதில் ஆழ்ந்த சிந்தனை எழுந்து விட்டால், விரைவில் லட்சியத்தை அடைவாய்.
* அறிவைத்தேடிச் செல். செல்வம் தானாகவே வந்துவிடும்.
* கஷ்டம் வரும்போதுதான் உனக்கு பல உண்மைகள் தெரியவரும்.
என்கிறார் பாரதியார்