* 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை தினமும் சொல்லு. முன்வினைப்பாவம் தீரும்.
* கோயில் பிரகாரத்தை மெதுவாக வலம் வரவும்.
* பிறர் கஷ்டத்தைப் போக்கும் செயல்களில் ஈடுபடு.
* கோயில்களுக்கு உன்னால் இயன்ற உதவிகளை செய்.
* பலனை எதிர்பார்த்து பிறருக்கு உதவி செய்யாதே.
* கோயிலின் கோபுரத்தை கண்டவுடன் கைகூப்பி வணங்கு.
* கடவுளை வணங்குவதை விட அவரது அடியார்களை வணங்குவது உயர்வானது.
* பெருமாள்தான் 'பரம்பொருள்' என்பதை அறிந்து பக்தி செலுத்து.
* புலனடக்கம் என்பது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.
* கோயிலில் உள்ள மூர்த்திகள் கல், சுதை, ஐம்பொன்னால் ஆனது என்று எண்ணினால் கடவுள் தெரியமாட்டார்.
* ஆழ்வார்கள் அருளிய திவ்யப்பிரபந்தங்களை படி. உனக்கு புண்ணியம் சேரும்.
* பிறரை குறை கூறுபவரிடம் பழகாதே. மீறி பழகினால் அவரது தீய குணம் உனக்கும் வந்துவிடும்.
* கோயிலில் கொடுக்கும் பிரசாதங்களை, வேண்டாம் என்று சொல்லாதே.
* பெருமாளின் திருவடிகளை பற்றிக்கொள். உனது பாவம் கரைந்துவிடும்.
வழிகாட்டுகிறார் ராமானுஜர்