எண்ணியதை அடைய...
ஜனவரி 19,2023,11:51  IST

ஜன.16 - திருவள்ளுவர் தினம்

* எண்ணியவர் மனஉறுதி உடையவராக இருந்தால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவார்.
* உரிய காலத்தில் ஒருவர் சிறிய உதவி செய்து இருந்தாலும், அது உலகத்தின் அளவைவிட மிகப் பெரியதாகும்.
* ஒருவர் செய்த நன்மையை மறக்காதே. அதுவே அவர் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிடு.
* நல்ல செயல்பாட்டிற்கு மன உறுதியே வேண்டும். மற்றவை எல்லாம் பயன்படாது.
* விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும்.
* நேர்வழி மாறாது அடக்கமாய் இருப்பவரின் உயர்வு, மலையின் மாண்பைக் காட்டிலும் பெரியது.
* மயிலிறகுதான் என்றாலும் அளவுக்கு மிகுதியாக ஏற்றினால், ஏற்றிய வண்டியின் அச்சும் முறியும்.
* தன்னிடம் உள்ளவற்றின் அளவை அறிந்து வாழாதவனின் வாழ்க்கை, உள்ளது போலத் தோன்றிக் கெடும்.
* கோடிப் பொருள் அடுக்கிக் கொடுத்தாலும், ஒழுக்கமான குடியில் பிறந்தவர் தவறு செய்வதில்லை.
* சோர்வு இல்லாமல் முயற்சி செய்தால், இடையூறாக வரும் முன்வினையையும் தோற்கடித்து வெற்றி காணலாம்.
* நல்ல நுால்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவதுபோல, பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும்.
* மறந்தும்கூடப் பிறருக்குக் கெடுதல் நினைக்காதே. மீறி நினைத்தால் அந்த அறமே உனக்கு கெடுதல் செய்துவிடும்.
* தம்மைவிடத் தம் குழந்தைகள் அறிவுடையோர் என்றால் பெற்றோருக்கு அதுதான் மகிழ்ச்சி.

வழிகாட்டுகிறார் திருவள்ளுவர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X