ஜன.16 - திருவள்ளுவர் தினம்
* எண்ணியவர் மனஉறுதி உடையவராக இருந்தால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவார்.
* உரிய காலத்தில் ஒருவர் சிறிய உதவி செய்து இருந்தாலும், அது உலகத்தின் அளவைவிட மிகப் பெரியதாகும்.
* ஒருவர் செய்த நன்மையை மறக்காதே. அதுவே அவர் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிடு.
* நல்ல செயல்பாட்டிற்கு மன உறுதியே வேண்டும். மற்றவை எல்லாம் பயன்படாது.
* விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும்.
* நேர்வழி மாறாது அடக்கமாய் இருப்பவரின் உயர்வு, மலையின் மாண்பைக் காட்டிலும் பெரியது.
* மயிலிறகுதான் என்றாலும் அளவுக்கு மிகுதியாக ஏற்றினால், ஏற்றிய வண்டியின் அச்சும் முறியும்.
* தன்னிடம் உள்ளவற்றின் அளவை அறிந்து வாழாதவனின் வாழ்க்கை, உள்ளது போலத் தோன்றிக் கெடும்.
* கோடிப் பொருள் அடுக்கிக் கொடுத்தாலும், ஒழுக்கமான குடியில் பிறந்தவர் தவறு செய்வதில்லை.
* சோர்வு இல்லாமல் முயற்சி செய்தால், இடையூறாக வரும் முன்வினையையும் தோற்கடித்து வெற்றி காணலாம்.
* நல்ல நுால்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவதுபோல, பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும்.
* மறந்தும்கூடப் பிறருக்குக் கெடுதல் நினைக்காதே. மீறி நினைத்தால் அந்த அறமே உனக்கு கெடுதல் செய்துவிடும்.
* தம்மைவிடத் தம் குழந்தைகள் அறிவுடையோர் என்றால் பெற்றோருக்கு அதுதான் மகிழ்ச்சி.
வழிகாட்டுகிறார் திருவள்ளுவர்