பெற்றோரை வணங்கு
ஜனவரி 19,2023,11:51  IST

* பெற்றோரே கண்கண்ட தெய்வம். அவர்களை முதலில் வணங்கு.
* உன்னை விட தாழ்ந்தவரிடமும் அன்பாக பேசு.
* வரவு அறிந்து செலவு செய். அதுவே உனக்கு நல்லது.
* எந்தப் பொருளின் மீது ஆசையில்லையோ அவற்றால் துன்பமில்லை.
* ஒரு உயிரை கொன்று சாப்பிடாமல் இருப்பதே உண்மையான விரதம்.
* கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது மிகவும் சிறப்பானது.
* ஊராரை பகைத்துக் கொள்ளாதே. மீறினால் துன்பம் வரும்.
* சிக்கனமாக இருந்து செல்வத்தை தேடிக்கொள்.
* யாரிடமும் கோபம் கொண்டு சண்டையிடாதே. மீறினால் நிம்மதி கெடும்.
* தென்னை மரம் இளநீர் தருவது போல, நல்லவருக்குச் செய்த உதவி பலமடங்கு நன்மை தரும்.
* உனக்கு கிடைக்காத எந்தவொரு பொருளையும் உடனே மறந்து விடு.
* சிறந்த உணவாக இருந்தாலும் காலம் அறிந்து சாப்பிடு.
* மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்று.
* சிறிய செயலாக இருந்தாலும் யோசித்து செய்.
* தினமும் காலை எழுந்தவுடன் கடவுளை வணங்கு.

கட்டளையிடுகிறார் அவ்வையார்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X