* பெற்றோரே கண்கண்ட தெய்வம். அவர்களை முதலில் வணங்கு.
* உன்னை விட தாழ்ந்தவரிடமும் அன்பாக பேசு.
* வரவு அறிந்து செலவு செய். அதுவே உனக்கு நல்லது.
* எந்தப் பொருளின் மீது ஆசையில்லையோ அவற்றால் துன்பமில்லை.
* ஒரு உயிரை கொன்று சாப்பிடாமல் இருப்பதே உண்மையான விரதம்.
* கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது மிகவும் சிறப்பானது.
* ஊராரை பகைத்துக் கொள்ளாதே. மீறினால் துன்பம் வரும்.
* சிக்கனமாக இருந்து செல்வத்தை தேடிக்கொள்.
* யாரிடமும் கோபம் கொண்டு சண்டையிடாதே. மீறினால் நிம்மதி கெடும்.
* தென்னை மரம் இளநீர் தருவது போல, நல்லவருக்குச் செய்த உதவி பலமடங்கு நன்மை தரும்.
* உனக்கு கிடைக்காத எந்தவொரு பொருளையும் உடனே மறந்து விடு.
* சிறந்த உணவாக இருந்தாலும் காலம் அறிந்து சாப்பிடு.
* மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்று.
* சிறிய செயலாக இருந்தாலும் யோசித்து செய்.
* தினமும் காலை எழுந்தவுடன் கடவுளை வணங்கு.
கட்டளையிடுகிறார் அவ்வையார்