நாம் எல்லோரும் உணவை சிரமத்தோடு கடித்து மெல்லுகிறோம் ஆனால் இந்த நாக்கு ஒன்றும் உழைப்பதில்லை. சுவைத்து உண்பதை தவிர வேறு எந்த வேலையும் செய்வது கிடையாது. பெரும்பான்மை யானவர்கள் நாம்.
இந்த நாக்கோ சிறுபான்மை. நம்முடைய வலிமையை காட்ட அதைக் கடித்து புண்ணாக்குவோம். அது என்ன செய்யும் என பற்கள் அனைத்தும் பேசிக் கொண்டன.
இதை அறிந்து கொண்ட நாக்கு அடே பற்களே நாம் அனைவரும் உடலில் உள்ள உறுப்புகள். ஒருவருக்கொருவர் உதவியும் ஒத்துழைப்புமாக செயல்படுவது தான் முறை. இதில் வேறுபடுத்தி பார்ப்பதற்கு இடமில்லை. அவரவர் வேலைகளை செய்வது சிறப்பு. மீறி தகராறு செய்தால், நான் என்ன செய்வேன் தெரியுமா தெருவில் போய் கொண்டிருக்கும் ஒருவனைப் பார்த்து முரடனே படவா என சொல்லி விட்டு உள்ளே போய் விடுவேன். அவன் வேகமாக வந்து முகத்தில் பல குத்துகள் விடுவான். நீங்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கமாக உதிர்ந்து விடுவீர்கள் என எச்சரித்தது நாக்கு. ஆமாம் அது கூறுவது உண்மை தான் என உணர்ந்தன பற்கள்.