பிப்.21 - பிறந்த நாள்
* எதிலும் ஆர்வமாக ஈடுபடு. ஜெயிப்பது நிஜம்.
* உண்மையான தேவைகள் நிச்சயம் உன்னைத் தேடி வரும்.
* அமைதியாக இருப்பதைவிட உண்மையை பேசு.
* தவறான பாதையில் செல்பவர்களுடன் பழகாதே.
* கடவுளின் அருளை நீயே உணர மறுக்கிறாய்.
* ஆபத்தான சமயத்தில் அமைதியாக இருப்பது அவசியம்.
* கஷ்டம் வந்தால் அதை கடவுள் கொடுத்த வரமாக கருது.
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.
* பொறாமை குணம் தைரியம் இல்லாதவர்களுக்கே வரும்.
* தற்பெருமையாக பேசாதே. மீறினால் வாழ்க்கையில் முன்னேறுவது கஷ்டம்.
* கடந்ததைப் பற்றி வருந்தாதே. வருவதை பற்றி கற்பனை செய்யாதே.
* உனக்கு தேவையானது கடவுளிடம் உள்ளது.
* நல்லவர்களுடன் பழகு. அவர்களின் பேச்சு ஆறுதல் தரும்.
* குறைவாகப் பேசு. அதுவே நல்லது.
* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள். வெற்றிப்பாதையில் பயணிக்கலாம்.
* மற்றவர்களுடன் வீணாக சச்சரவில் ஈடுபடாதே.
* மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நல்ல வழியில் வாழ்க்கையை நடத்திச் செல்.
நம்பிக்கை தருகிறார் ஸ்ரீஅன்னை