* காலையில் சீக்கிரமாகவும் உற்சாகமாகவும் எழுந்திருக்க வேண்டும் அதுவே ஆரோக்யத்தின் முதற்படி.
* நாம் இருக்கும் இடமே நல்லது.
* பிறர் இல்லாத நேரத்தில் அவர்களை பற்றி பேசாதீர்கள்.
* உயிர்கள் மீது இரக்கம் கொள்பவர் பாக்கியவான்.
* பொய் பேசி சேர்க்கும் பொருள் காற்றாய் பறந்து விடும்.
* சகோதர சகோதரிகளை திட்டாதீர்கள்.
* தன் உதடுகளை அடக்குபவரே புத்திசாலி.
* பேசும் வார்த்தைகளை சுருக்கமாகவும் பிறருக்கு புரியும்படியும் பேசுங்கள்.
* பணியில் கவனமாக செயல்படுங்கள்.
* வீண் செலவுகளை குறையுங்கள்.
* உங்களை வெறுப்பவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.
* எதை விதைக்கிறானோ அந்த விளைச்சலையே மனிதன் அறுவடை செய்கின்றான்.
* நம்பிக்கையோடு கூடிய புன்னகை, உங்களை விரும்பாதவரையும் திரும்பி பார்க்க வைக்கும்.
* பாம்புகளைப் போல விவேகமும், புறாக்களைப் போல கபடமில்லாமலும் இருங்கள்.
- பைபிள்