இதுதான் வாழ்க்கை
மார்ச் 09,2023,11:30  IST

* ஆயுள் தேயும். ஆசையோ வளரும். இதுதான் வாழ்க்கை.
* மனதுடன் நடத்தும் போராட்டம் என்றைக்கும் ஓய்வதில்லை.
* உடலில் மூச்சுள்ள வரையில் மட்டுமே உங்களுக்கு மரியாதை இருக்கும்.
* பிறருக்காக நீங்கள் அழலாம். ஆனால் அவருக்காக நீங்கள் சாப்பிட முடியுமா?
* மனதை அடக்குகின்ற வழிமுறைகளையே சாஸ்திரங்கள், ஞான நுால்கள் எடுத்துரைக்கின்றன.
* முதுமை வந்ததும் ஆசை அடங்கிவிடும். செல்வம் சுருங்கியதும் சுற்றம் கலைந்துவிடும்.
* உலகம் விசித்திரமானது. நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என உங்களுக்கே தெரியாது.
* பிறப்பும், அடுத்து நடப்பதும் உங்கள் கையில் இல்லை.
* உருவமற்ற நமது மனம் பெரிய உருவம் படைத்த நம்மை ஆட்டிப்படைக்கிறது.
* 'நமசிவாய' என்னும் ஐந்து எழுத்துக்களும் சிவபெருமானே.
* ஆசைகளை அதிகப்படுத்தினால் துன்பத்தை அனுபவிக்க நேரிடும்.
* மானிடப்பிறவி அரிதினும் அரிது. அந்தணராகப் பிறப்பது அதனினும் அரிது.
* நதியானது கடலில் கலக்கும். அதுபோல் கடவுளை பிடித்துக்கொள்ளுங்கள்.
* முருகப்பெருமானே வேதத்தின் உட்பொருளாக இருந்து உலகை காத்து வருகிறார்.
* தன்னை வழிபடுவோரின் துயரத்தை உடனே போக்குபவர் விநாயகர்.
* பகவத் கீதையை படியுங்கள். கங்கை நீரை அருந்துங்கள்.

தெளிவுபடுத்துகிறார் ஆதிசங்கரர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X