* கோயில்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுங்கள். புண்ணியம் சேரும்.
* பலனை எதிர்பார்த்து பிறருக்கு உதவி செய்யாதீர்கள்.
* கோயில் பிரகாரத்தை மெதுவாக வலம் வர வேண்டும்.
* பிறர் கஷ்டத்தை தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
* கோயிலின் கோபுரத்தை பார்த்தவுடன் கைகூப்பி வணங்குங்கள்.
* புலனடக்கம் என்பது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.
* கோயிலில் உள்ள மூர்த்திகள் கல், சுதை, ஐம்பொன்னால் ஆனது என நினைத்தால் கடவுள் தெரியமாட்டார்.
* ஆழ்வார்கள் அருளிய திவ்யப்பிரபந்தங்களை படியுங்கள்.
* பிறரை குறை கூறுபவரிடம் பழகாதீர்கள். மீறினால் அவரது குணம் உங்களுக்கும் வந்துவிடும்.
* 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை சொல்லுங்கள்.
* கடவுளை வணங்குவதை விட, அவரது அடியார்களை வணங்குவது உயர்வானது.
* பெருமாள்தான் 'பரம்பொருள்' என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
* கோயிலில் கொடுக்கும் பிரசாதங்களை, வேண்டாம் என்று சொல்லாதீர்கள்.
* கடவுளின் திருவடிகளை பற்றிக்கொண்டால், பாவம் கரைந்துவிடும்.
வழிகாட்டுகிறார் ராமானுஜர்