த.நேரு, வெண்கரும்பூர், கடலுார்.
*வருமானம் இருந்தும் முன்னேறவில்லையே...
இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்வதுதான் உண்மையான மகிழ்ச்சி. முன்னேற்றமும் அதுவே.
எம்.ஆனந்தி, காயல்பட்டினம், துாத்துக்குடி.
*குழந்தைகளிடம் படிக்கும் பழக்கம் குறைகிறதே...
அலைபேசி, இணையதள பயன்பாட்டை குறைத்தால் மட்டுமே படிக்க நேரம் கிடைக்கும். இதற்கு பெற்றோர், ஆசிரியர் வழிகாட்ட வேண்டும்.
கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதுார், கன்னியாகுமரி.
*கார்த்தவீரியன், வீரபத்திரர் இருவரும் ஒருவரா?
சிவனிடம் தோன்றிய இவர்கள் வெவ்வேறானவர்கள். மனிதனாக வாழ்ந்து தீயசக்திகளை அழித்தவர் கார்த்தவீரியன். தெய்வமாக இருந்து தீயசக்திகளை அழிப்பவர் வீரபத்திரர்.
எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோவைப்புதுார், கோயம்புத்துார்.
*அம்மனுக்கு கண்மலர் செலுத்துவது ஏன்?
கண்நோய் தீர்வதற்காக கண்மலரை காணிக்கை செலுத்துகிறோம். அப்போது மாவிளக்கை ஏற்றுங்கள்.
எம்.கமலேஷ், சோழிங்கநல்லுார், சென்னை.
*குரங்கு, நாய் அடிக்கடி என்னை துரத்துகின்றன. என்ன செய்யலாம்?
இது விலங்குகளின் இயல்பு. அவற்றை விட்டு விலகுங்கள்.
கே.ஜனா, புதுடில்லி.
*மிளகு சாதத்தை அன்னதானம் செய்யலாமா?
செய்யலாம். அர்த்தஜாம பூஜையின் போது கோயிலில் நைவேத்யமாக மிளகு சாதம் படைப்பர். அதற்கு பொருளுதவி செய்யுங்கள்.
ஆர்.அருணா, திருப்பரங்குன்றம், மதுரை.
*பாடல்கள் பாடும் முன் தெய்வத்திடம் உத்தரவு கேட்கணுமா?
தேவையில்லை. பக்தியுடன் பாடினால் போதும்.
பி.ஜெயா, மைசூரு.
*யந்திரத்தில் மந்திரங்களை உருவேற்றுவது எப்படி?
மந்திரத்தை உச்சாடனம் (தொடர்ந்து ஜபிப்பது) செய்தால் யந்திரத்தில் ஏறும். இதனை 'உருவேறத் திருவேறும்' என்பர்.
க.வள்ளி, ஆண்டிபட்டி, தேனி.
*அம்மன் தனித்து அருள்புரியும் தலங்களைச் சொல்லுங்கள்?
சமயபுரம், புன்னைநல்லுார், பண்ணாரி மாரியம்மன், மேல்மலையனுார் அங்காளம்மன், ஆனைமலை மாசாணியம்மன் என எத்தனையோ தலங்கள் உள்ளன.
என்.சம்பத், உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
*இறப்புத் தீட்டின் போது சந்தியாவந்தனம் செய்யலாமா?
தீட்டு காலத்தில் அர்க்கியம் இன்றியும், வியாஹிருதி நீக்கி மந்திரம் ஜபித்தும் சந்தியாவந்தனம் செய்யலாம். இதற்கான விளக்கத்தை புரோஹிதர்களிடம் கேளுங்கள்.