* புனித நதிகளில் இரவு நேரத்திலோ, ஒற்றை ஆடை உடுத்தியோ நீராடக் கூடாது.
* வடக்கு அல்லது கிழக்கு நோக்கி நின்று மூன்று முறை சிறிது நீரை உள்ளங்கையில் எடுத்து தலையில் தெளிக்க வேண்டும்.
* புண்ணிய நதி, கடலில் நீராடுவோருக்கு சிவன், பெருமாளின் அருள்
கிடைக்கும்.
* தீர்த்தங்களில் மூன்று முறை மூழ்கி எழுவது நல்லது. முதல் முறையால் பாவம் தீரும். இரண்டாம் முறையால் சொர்க்க வாழ்வும், மூன்றாம் முறையால் புண்ணியமும் கிடைக்கும்.
* நீராடியபின் அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்தால் வாழ்வு இனிதாகும்.