எண்ணியதை அடைவது எளிது
மார்ச் 27,2023,09:09  IST

* எண்ணியதை எப்போதுமே நினைத்தால் அதை அடைவது எளிது.
* விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும்.
* ஒருவருக்கு வறுமையைப் போன்று துன்பம் தருவது எது என்றால், அது வறுமையே ஆகும்.
* ஒருவர் எதைக் காக்காவிட்டாலும் நாவைக் காக்க வேண்டும். மீறினால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.
* எந்தப் பொருள் மீது பற்று இல்லையோ, அந்தப் பொருளால் துன்பமே வராது.
* பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னைப் பெரிதாக நினைப்பவன் விரைவாக கெடுவான்.
* பற்றுகளை அகற்றுவதற்காகவே பற்றில்லாதவனைப் பற்றி நிற்க வேண்டும்.
* மயிலிறகுதான் என்றாலும் அளவுக்கு அதிகமாக ஏற்றினால், ஏற்றிய வண்டியின் அச்சு முறியும்.
* உலகத்தை வெல்லக் கருதுபவர், கலங்காமல் உரிய காலத்துக்குக் காத்திருப்பர்.
* பேராசை என்னும் பெருந்துன்பம் தொலைந்தால், இன்பம் இடைவிடாமல் வரும்.
* முகக்குறிப்பில் அகக்குறிப்பை அறிபவரை என்ன பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்.
* உண்டதும், செரித்ததும் அறிந்து உண்டால் மருந்து என ஒன்று தேவையே இல்லை.

என்கிறார் திருவள்ளுவர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X