இதுவே திருமந்திரம்
மார்ச் 27,2023,09:10  IST

* 'ஓம் நமோ நாராயணாய' என மூன்று பதங்களைக் கொண்டது திருமந்திரம்.
* பெருமாள் கோயில் கொண்டிருக்கும் திவ்ய தேசங்களுக்கு இயன்ற உதவிகளை செய்.
* உலகியலைச் சார்ந்த பற்றினைக் கைவிடு.
* பெருமாளுக்கு நிவேதனம் செய்த உணவுகளை சாப்பிடு. அதுவே சிறப்பு.
* ஆழ்வார்கள் அருளியுள்ள வேதத்துக்கு ஒப்பான திவ்யப்பிரபந்தங்களை படி.
* பெருமாளே பரம்பொருள் எனத் தெளிந்து, அவரிடம் பக்தி செலுத்து.
* எந்தவொரு செயலையும் பலனை எதிர்பார்த்து செய்யாதே.
* உடலே ஆத்மா என எண்ணாதே. சரீரம் வேறு. ஆத்மா வேறு.
* பெருமாளின் திருவடிகளில் சரணடைந்தவருக்கு துன்பம் இல்லை.
* புலனடக்கம் என்பது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.
* அற்ப விஷயங்களில் ஆசை வைக்காதே.
* எப்போதும் பிறரை குறை கூறுபவர்களிடம் சேராதே.
* ஆசார்யார்களை சராசரி மனிதராக எண்ணாதே.
* ஞானம் நிறைந்த பெரியவர்களை பார்த்தால் உடனே வணங்கு.
* 'நாம் பெருமாள் அடியார்களுக்கு அடிமை' என்ற உணர்வோடு செயல்படு.
* வைஷ்ணவர்களுடைய பிறப்பை பற்றி ஆராயாதே. அது கொடிய பாவமாகும்.

சொல்கிறார் ராமானுஜர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X