மாங்கல்ய பலம் பெருக காரடையான் நோன்பன்று படிங்க.
மாங்காட்டில் வாழ்பவளே காமாட்சி போற்றி
மகிமையுள்ள தெய்வம் நீயே காமாட்சி போற்றி
பஞ்சாக்நி மத்தியிலே காமாட்சி போற்றி
பரமனுக்குத் தவமிருந்த காமாட்சி போற்றி
காஞ்சியிலே கோயில்கொண்ட காமாட்சி போற்றி
கல்யாணக் கோலம்பூண்டாய் காமாட்சி போற்றி
சங்கரரும் பூஜை செய்த காமாட்சி போற்றி
சக்கரத்தில் உறைந்திட்ட காமாட்சி போற்றி
அர்த்தமேரு அலங்கரிக்கும் காமாட்சி போற்றி
அண்டி னோரைக் காக்கின்ற காமாட்சி போற்றி
காஞ்சிமுனி சேவிக்கும் காமாட்சி போற்றி
கண்கண்ட தெய்வமம்மா காமாட்சி போற்றி
பஞ்சலோக வடிவினியே காமாட்சி போற்றி
பக்தர் துயர் தீர்த்திடுவாய் காமாட்சி போற்றி
ஆடிப்பூர தினத்தினிலே காமாட்சி போற்றி
ஆனந்தமாய் வீற்றிருப்பாய் காமாட்சி போற்றி
பங்குனிநல் உத்திரத்தில் காமாட்சி போற்றி
பரமனைநீ மணங்கொண்டாய் காமாட்சி போற்றி
கரும்போடு காட்சிதரும் காமாட்சி போற்றி
கருணையுள்ள தெய்வம் நீயே காமாட்சி போற்றி
கிளியோடு காட்சிதரும் காமாட்சி போற்றி
கிருபைநீயும் செய்திடுவாய் காமாட்சி போற்றி
சாந்தமாக காட்சி தரும் காமாட்சி போற்றி
சந்தானம் தந்திடுவாய் காமாட்சி போற்றி
சூதவனம் கோவில் கொண்ட காமாட்சி போற்றி
சூதுகளை அகற்றிடுவாய் காமாட்சி போற்றி
இடப்புறத்தில் அமர்ந்திட்ட காமாட்சி போற்றி
இன்பமெல்லாம் தந்திடுவாய் காமாட்சி போற்றி
ஆறுவாரப் பூஜை ஏற்பாய் காமாட்சி போற்றி
ஆதிகாமாட்சி போற்றியும் நீயே காமாட்சி போற்றி
முதல்வாரப் பூஜையிலே காமாட்சி போற்றி
நம்குறைகள் அறிந்திடுவாள் காமாட்சி போற்றி
இரண்டாம்வாரப் பூஜையிலே காமாட்சி போற்றி
இன்னல்களைப் போக்கிடுவாள் காமாட்சி போற்றி
மூன்றாம்வாரப் பூஜையிலே காமாட்சி போற்றி
மூன்றுவரம் தந்திடுவாள் காமாட்சி போற்றி
நான்காம் வாரப் பூஜையிலே காமாட்சி போற்றி
நலன்கள்பல தந்திடுவாள் காமாட்சி போற்றி
ஐந்தாம்வாரப் பூஜையிலே காமாட்சி போற்றி
ஐயங்களைப் போக்கிடுவாள் காமாட்சி போற்றி
ஆறாம்வாரப் பூஜையிலே காமாட்சி போற்றி
நினைத்ததெல்லாம் நடத்தி வைப்பாள் காமாட்சி போற்றி
மாவடியில் வசித்தவளே காமாட்சி போற்றி
மனக்குறைகள் தீர்த்திடுவாள் காமாட்சி போற்றி
தாம்பூலம் ஏற்றிடுவாள் காமாட்சி போற்றி
தாயாகக் காத்திடுவாள் காமாட்சி போற்றி
கற்பூரம் ஏற்றிடுவேன் காமாட்சி போற்றி
கலிதெய்வம் நீதானே காமாட்சி போற்றி
புஷ்பமாலை ஏற்றிடுவாள் காமாட்சி போற்றி
புண்ணியங்கள் தந்திடுவாள் காமாட்சி போற்றி
காய்ச்சிட்ட பாலுடனே காமாட்சி போற்றி
கற்கண்டும் ஏற்றிடுவாள் காமாட்சி போற்றி
ஏலக்காய் தேனுடனே காமாட்சி போற்றி
ஏழைகளின் துயர் தீர்ப்பாய் காமாட்சி போற்றி
எலுமிச்சம் பழம் ஏற்பாள் காமாட்சி போற்றி
எம்குறைகள் தீர்த்திடுவாள் காமாட்சி போற்றி
மாலையாக காட்சிதரும் காமாட்சி போற்றி
பாசமுடன் காத்திடுவாள் காமாட்சி போற்றி
மங்களமாய் காட்சி தரும் காமாட்சி போற்றி
மங்களமாய் வாழவைப்பாள் காமாட்சி போற்றி
உத்யோகம் தந்திடுவாள் காமாட்சி போற்றி
உன்னடியே சரணமம்மா காமாட்சி போற்றி
அன்னை உனை வேண்டி நின்றேன் காமாட்சி போற்றி
ஆதரிப்பாய் என்னையும் நீ காமாட்சி போற்றி
மாங்கல்யம் தந்திடுவாள் காமாட்சி போற்றி
மக்களையும் காத்திடுவாள் காமாட்சி போற்றி
மணாளனைத் தந்திடுவாள் காமாட்சி போற்றி
மழலைகளும் தந்திடுவாள் காமாட்சி போற்றி
துாளிகளை ஏற்றிடுவாள் காமாட்சி போற்றி
துன்பங்களைத் துடைத்திடுவாள் காமாட்சி போற்றி
வெற்றிகளைத் தந்திடுவாள் காமாட்சி போற்றி
வேதனைகள் போக்கிடுவாள் காமாட்சி போற்றி
வேழமுகம் நாயகன் தாய் காமாட்சி போற்றி
வேல்முருகன் அன்னையும் நீ காமாட்சி போற்றி
குருநாதர் காட்டிட்ட காமாட்சி போற்றி
குவலயத்தோர் கொண்டாடும் காமாட்சி போற்றி
அகிலாண்ட நாயகியே காமாட்சி போற்றி
அன்பர்குறை தீர்த்திடுவாள் காமாட்சி போற்றி
ஆவின்பால் குடித்தவளே காமாட்சி போற்றி
ஆனந்தம் தந்திடுவாள் காமாட்சி போற்றி
சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன் காமாட்சி போற்றி
சீக்கிரமே அருள்தருவாய் காமாட்சி போற்றி
கெஞ்சுகிறேன் உன்னையம்மா காமாட்சி போற்றி
கீர்த்தியுடன் வாழவைப்பாய் காமாட்சி போற்றி
கரம்கூப்பி வணங்குகிறேன் காமாட்சி போற்றி
வரம் அனைத்தும் தந்திடுவாய் காமாட்சி போற்றி
நினைத்ததெல்லாம் நடத்தி வைப்பாள் காமாட்சி போற்றி
நீதிகளைத் தந்திடுவாள் காமாட்சி போற்றி
வறுமைகளை ஓட்டிடுவாள் காமாட்சி போற்றி
வாழ்வுதந்து காத்திடுவாள் காமாட்சி போற்றி
அர்ச்சனைகள் ஏற்றிடுவாள் காமாட்சி போற்றி
அகத்தினிலே குடியிருப்பாள் காமாட்சி போற்றி
குழந்தை நானும் மனம் மகிழ காமாட்சி போற்றி
குமரனுடன் காட்சி தாராய் காமாட்சி போற்றி
அன்னை தந்தை தெய்வம் நீயே காமாட்சி போற்றி
அருள்வடிவாம் குருநீயே காமாட்சி போற்றி
மடிசாரில் காட்சிதரும் காமாட்சி போற்றி
மனவினைகள் தீர்த்திடுவாள் காமாட்சி போற்றி
கடும்தபசு புரிந்திட்ட காமாட்சி போற்றி
கவலைகளைக் களைந்திடுவாள் காமாட்சி போற்றி
காமகோடி ஈஸ்வரியே காமாட்சி போற்றி
காத்திருந்து வரமளிப்பாய் காமாட்சி போற்றி
காஞ்சிமுனி வேண்டிநிற்கும் காமாட்சி போற்றி
காலமெல்லாம் காத்தருள்வாய் காமாட்சி போற்றி