* தெய்வங்களுக்கு ஒருமுறை பூஜை, அர்ச்சனை செய்த பூக்களாலோ, குங்குமத்தாலோ மறுபடியும் பூஜை, அர்ச்சனை செய்யக்கூடாது.
* ஒருவரது வாகனம், படுக்கை, ஆசனம், கிணறு, தோட்டம், வீடு ஆகியவைகளை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது. மீறினால் அவரது பாவத்தில் நான்கில் ஒரு பங்கை வாங்கிக் கொள்கிறான்.
* உடல், செல்வம் அழியக்கூடியவை என்பதால் தர்மம் செய்யுங்கள். உங்கள் அருகில் எமன் இருப்பதை ஞாபகம் வைத்திருங்கள்.
* வில்வ இலைகளால் சூரியனுக்கு அர்ச்சனை செய்யக்கூடாது.
* அபிஷேக நீர், சந்தனம், புஷ்பம், துாபம், தீபம் போன்றவைகளை, பூஜை செய்பவர் தனது இடது பக்கத்தில் வைக்கக்கூடாது.
* பூஜைக்கான சந்தனத்தை மண் பாத்திரத்தில் வைக்கக்கூடாது.
* கோயில் கொடி மரம் அருகில் இருக்கும் பலிபீடம் என்னும் பகுதியை தொடுவதோ, மிதிப்பதோ கூடாது.
* ஹோமத்தில் எரியும் நெருப்பை வாயால் ஊதக்கூடாது. அதன் மீது எச்சில் படுவது அவமானமான செயல்.
* உப்புள்ள உணவை சாப்பிட்டு விட்டு மாலை நேரம் எந்த ஹோமத்தையும் செய்யக்கூடாது.