* பக்தி மார்க்கமே கடவுளை அடைய எளிய வழி.
* எல்லா ஞானிகளின் உபதேசமும் ஒரே கருத்தையே உணர்த்தும்.
* அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு அளிப்பவரின் மனம் சமநிலை இழப்பதில்லை.
* உண்மையையும், பொய்யையும் பிரித்து அறிய பழகு.
* ஏழைக்கும் ஏழையாக இருப்பதே நல்லது.
* பசுவைத் தேடும் கன்று போல, கடவுளை காண மனம் ஏங்க வேண்டும்.
* பொய் இருக்குமிடத்தில் எல்லா தீமைகளும் இருக்கும்.
* தீமைக்குப் பதிலாக தீமை செய்வது கூடாது.
* நல்லவர்களின் சேர்க்கையால் மனம் துாய்மை அடையும்.
* சம்பாதித்த பணத்தை பிறருக்கு கொடுத்து மகிழ்ச்சி அடைய வேண்டும்-.
* விடாமுயற்சி இருந்தால் உலகில் எல்லாம் சாத்தியமே.
* உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரவர் மனமே காரணம்.
* விவேகம் இல்லாதவனை அறிஞன் என்று சொல்லக் கூடாது.
* ஒரு விஷயத்தை கேட்பதை விட நேரே காண்பது சிறப்பு.
* தீயவைகளை எதிர்த்து செயல்படாமல் இருப்பது கூட அறியாமையே.
வழிகாட்டுகிறார் ராமகிருஷ்ணர்