* உயர்வான எண்ணம், விரிவான சிந்தனை, நேர்மையான செயல் இருப்பவர்களை வீழ்த்த முடியாது.
* உடன் இருப்பவர்களுக்கு ஓடமாகவும், உதறிப்போனவர்களுக்கு பாடமாகவும் இருங்கள்.
* பேச்சிலும், செயலிலும் ஒழுங்கு இருந்தால் அதுவே ஆனந்தம்.
* நல்ல மனிதர்களை சேமிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது.
* தவறு நடப்பது இயல்பு. திருத்திக்கொள்ள நினைப்பது அறிவாளியின் செயல்.
* தளராமல் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெற்ற பின்னர் ஒதுங்கி சென்றவர்களும், குறை சொன்னவர்களும் உங்களை கொண்டாடுவர்.
- பொன்மொழிகள்