* தலைக்கனத்தினால் அறிவு குறையும். அன்பு செய்யுங்கள் நன்மை அதிகரிக்கும்.
* சோதனையை சகித்துக்கொள்ளுபவர் முடிவில் கிரீடத்தைப் பெறுவார்.
* எறும்பின் உழைப்பைக் கவனியுங்கள். அதற்கு தலைவன் கிடையாது.
* கருணையும் சத்தியமும் ஒருவரிடம் இருக்குமேயானால் அவரிடம் எல்லாம் மண்டியிடும்.
* முட்டாளின் பாராட்டை விட அறிவாளியின் கடுஞ்சொல் சிறந்தது.
* கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களை பிறருக்கும் கற்றுக்கொடுங்கள்.
* புருஷனை தவிர கற்புள்ள பெண் வேறு எதையும் அறியாதவள்.
* உரக்கப்பேசுங்கள். கோபப்படுவதில் தாமதமாக இருங்கள்.
* மனக்குழப்பம் தீர அமைதியாக இருங்கள்.
* ஒருவருக்கு உதவியாக கொடுக்கப்படும் பணம் அவரது பாவம் போக்கும்.
* வெற்று வார்த்தை பேசுபவர்களிடம் கவனம் செலுத்தாதீர்.
* யாரையும் ஏமாற்ற வேண்டாம். யாரிடமும் ஏமாற வேண்டாம்.
* ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருங்கள்.
* எந்த செயலையும் முனைப்போடு செய்தால் வெற்றி உறுதி.
-பொன்மொழிகள்