எது வேண்டும்
மே 22,2023,08:34  IST

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான
பேய் பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள்
வளர் தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உடலும் மனமும் நன்றாக இருக்கவும், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னை தீரவும், நல்லவேலை கிடைக்கவும் என பல பல காரணங்களுக்காக கடவுளை நினைக்கிறோம். ஆனால் வாய் ஒன்று சொல்லும், மனம் வேறு ஒன்றை நினைக்கும் மனிதர்கள் தான் இங்கு அதிகம். அது பக்தியா....இல்லை.
ஒரே சிந்தனையுடன் கடவுளின் திருவடியை நினைக்க வேண்டும் என ஆரம்பித்து அவரின் புகழை பேசுதல், பொய்பேசாமல் இருத்தல், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தல், நல்லறிவு பெறுதல், நோயில்லாத வாழ்வு என வேண்டும் என சென்னையில் அருள் செய்யும் கந்தவேளே ! குளிர்ந்த முகத்தை உடைய, துாய்மையான மணிகளில் சிறந்த சைவமணியே, சண்முகத்தெய்வமணியே எனக்கு நீ யாவற்றையும் அருள வேண்டும் என மக்களுக்காக வேண்டுகிறார் வடலுார் வள்ளலார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X