வாழ வைப்பாள் வனபத்ரகாளி
மே 22,2023,08:52  IST

கேரள மாநிலம் தேக்கடியின் காவல் தெய்வமான காளியை 'தேக்கடி தேவி' என மக்கள் அழைக்கின்றனர். உங்கள் குறை தீர வெள்ளியன்று நடக்கும் குருதி பூஜையை தரிசியுங்கள்.
150 ஆண்டுகளுக்கு முன்பு கேரள, தமிழக பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு தங்கியிருந்தனர். வனவிலங்குகள் அதிகம் இருந்ததால் வனதெய்வமான காளியை வழிபட்டனர். அதன் அடையாளமாக குலமாவு மரத்தடியில் திரிசூலம் வைத்து வழிபட்டனர். அதனருகில் இருந்த கல்லில் சுயம்பு மூர்த்தியாக காளியும் காட்சியளித்தாள். பின்னர் அம்மனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. கொடிமரம் பிரதிஷ்டை செய்த போது துர்கையம்மனுக்கு சன்னதி கட்டப்பட்டது.
விநாயகர், நாகேஸ்வரர், கருப்பசுவாமி, சனீஸ்வரருக்கும் சன்னதிகள் உள்ளன. தினமும் இரண்டு கால பூஜை நடக்கிறது. ஆயில்யம் நட்சத்திரத்தன்று நாகருக்கு பாலாபிேஷகம் செய்தால் நாகதோஷம், விஷபயம் விலகும். நிலம், பூமி தொடர்பான வழக்குகள், பிரச்னை தீர அம்மனின் பாதத்தில் மண்ணை வைத்து வழிபடுகின்றனர். இளநீர் வைத்து வழிபட்டால் மனபயம் மறையும். இதனை நடைகுருதி பூஜை என்கின்றனர்.
திருவிழாவின் போது தேவி புராணத்தை ஏழுநாட்கள் பாராயணம் செய்வர். இதற்கு சப்தாஹம் என்று பெயர்.

எப்படி செல்வது: மதுரையில் இருந்து கம்பம் வழியாக 130 கி.மீ.,
விசேஷ நாள்: சித்திரை ரோகிணி ஆராட்டு 10 நாள் உற்ஸவம்
நேரம்: அதிகாலை 5:30 - 9:30 மணி; மாலை 5:00 - 7:30 மணி
தொடர்புக்கு: 94473 89736, 99953 02059
அருகிலுள்ள தலம்: குமுளி துர்கா கணபதி பத்ரகாளி கோயில் 1 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:30 - 11:00 மணி; மாலை 5:30 - 8:00 மணி
தொடர்புக்கு: 85478 54437, 94958 39237

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X