சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
மே 26,2023,13:02  IST

* சூரியபகவான் உதயமாகும் நேரத்தில் அவரை வணங்குங்கள். கண் பார்வை தெளிவடையும்.
* முறைப்படி சன்னியாசம் பெறுதல் என்பது மறுபிறவி போன்றது.
* பசியில் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்தால், வாழ்வு வளம் பெறும்.
* ஓர் அக்னியோடு மற்றோர் அக்னியை சேர்க்கக்கூடாது. அக்னியில் தேவை இல்லாத பொருளை இடவோ, நீரைக்கொட்டி அணைக்கவோ கூடாது.
* சிவன் கோயிலில் உள்ள ஏதேனும் மூன்று விளக்குகளுக்கு 48 நாட்களுக்கு தொடர்ந்து எண்ணெய் ஊற்றினால், பூர்வீக சொத்து வழக்கு சாதகமாக முடியும்.
* உண்மையை பேசுங்கள். முடியாவிட்டால் மவுனமாக இருங்கள்.
* வீட்டு வாசலுக்கு வரும் வாயில்லா ஜீவன்களுக்கு குடிக்க நீர் வையுங்கள். வாழ்க்கைத்துணையுடன் இருக்கும் மனஸ்தாபம் நீங்கும்.
* நம்மை நாமே சுற்றிக்கொண்டு தெய்வங்களை வணங்கக்கூடாது.
* முதுமை, பொருள், பிறப்பினால் வரும் உறவுகள், மரபுகள் என இவற்றால் ஒருவர் பெரியவர் ஆக மாட்டார். அறிவால் உயர்ந்தவரே பெரியவர்.
* குலதெய்வப் பிரார்த்தனைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தால், தொழிலில் இருக்கும் மந்த நிலை மாறும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X