* சூரியபகவான் உதயமாகும் நேரத்தில் அவரை வணங்குங்கள். கண் பார்வை தெளிவடையும்.
* முறைப்படி சன்னியாசம் பெறுதல் என்பது மறுபிறவி போன்றது.
* பசியில் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்தால், வாழ்வு வளம் பெறும்.
* ஓர் அக்னியோடு மற்றோர் அக்னியை சேர்க்கக்கூடாது. அக்னியில் தேவை இல்லாத பொருளை இடவோ, நீரைக்கொட்டி அணைக்கவோ கூடாது.
* சிவன் கோயிலில் உள்ள ஏதேனும் மூன்று விளக்குகளுக்கு 48 நாட்களுக்கு தொடர்ந்து எண்ணெய் ஊற்றினால், பூர்வீக சொத்து வழக்கு சாதகமாக முடியும்.
* உண்மையை பேசுங்கள். முடியாவிட்டால் மவுனமாக இருங்கள்.
* வீட்டு வாசலுக்கு வரும் வாயில்லா ஜீவன்களுக்கு குடிக்க நீர் வையுங்கள். வாழ்க்கைத்துணையுடன் இருக்கும் மனஸ்தாபம் நீங்கும்.
* நம்மை நாமே சுற்றிக்கொண்டு தெய்வங்களை வணங்கக்கூடாது.
* முதுமை, பொருள், பிறப்பினால் வரும் உறவுகள், மரபுகள் என இவற்றால் ஒருவர் பெரியவர் ஆக மாட்டார். அறிவால் உயர்ந்தவரே பெரியவர்.
* குலதெய்வப் பிரார்த்தனைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தால், தொழிலில் இருக்கும் மந்த நிலை மாறும்.