எல்லாம் நல்லதாகவே நடக்கும்
மே 26,2023,13:26  IST

* நல்ல மனம் கொண்டவர்களுக்கு, எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
* ஆணவத்தை கைவிட்டு ஆர்வமுடன் பணியில் ஈடுபடு.
* உணவிலும், உடையிலும் எளிமையாக இரு.
* மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் காரணம், அவரவர் செய்த பாவ புண்ணிங்களே.
* நல்லதோ கெட்டதோ அவரவர்க்குரிய வினைப் பயனை அனுபவித்தே ஆக வேண்டும்.
* இன்ப துன்பம் மாறி மாறி வரும். ஆனால் யாருக்கும் நிலைத்திருப்பதில்லை.
* உலகத்தின் உரிமையாளரான கடவுளைத் தவிர, வேறு யாராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது.
* சுவாசிப்பது மட்டுமல்ல, பிறருக்கு சேவை செய்வதுதான் வாழ்க்கை.
* குறிக்கோள் உடையவர்கள் மங்காத புகழுடன் வாழ்வர்.
* மனிதப்பிறவி மகத்தானது. நல்ல செயல்களை செய்து அதை பயன்படுத்திக்கொள்.
* துன்பத்தில் வருந்துபவர்களுக்கு உதவுவது உன் கடமை.
* உண்மை எது என்பதை கண்டறிந்து செயல்படுவதே விவேகம்.
* யாரிடமும் சண்டையிடாதே. உன்னை விமர்சிக்கும் இடத்தை விட்டு விலகிச்செல்.
* பணம் இல்லாமல் வாழ முடியாது. அதே சமயம் கஞ்சனாக இருக்காதே.

என்கிறார் ஷீரடி சாய்பாபா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X