சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
ஜூன் 02,2023,10:38  IST

* கோயிலில் குளத்து மீன்களுக்கு உணவிட்டால், முன்வினைப்பாவம் தீரும்.
* கடவுள் வழிபாடு, பூஜையை கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கிச் செய்வது சிறப்பு.
* வீட்டைக் காப்பது நிலைப்படி. அதனால்தான் அதை கடவுளாக கருதி மஞ்சள், குங்குமம் இட்டு வழிபடுகிறோம்.
* அருகில் உள்ள கோயிலில் உழவாரப் பணி செய்யுங்கள். உடல்நல பிரச்னை சரியாகும்.
* வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணருக்கு அவல், பொரி, பாயசம் வைத்து வழிபட்டால் இழந்த பொருளை பெறலாம்.
* வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுத்தால், தொழிலில் லாபம் இரட்டிப்பாகும்.
* திங்களன்று விநாயகரை வணங்கினால் கெட்ட கனவு வராது.
* எந்தவொரு பொருள், பணத்தை வலது கையால் கொடுத்து, வாங்கினால் அது நாளுக்கு நாள் பெருகும்.
* குழந்தை இல்லாதவர்கள் வெள்ளியன்று பசுவுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுத்தால் விரைவில் சுபச்செய்தி வரும்.
* திருவண்ணாமலை சென்று வந்தால், பிள்ளைகளுக்கு சீக்கிரமே நல்ல இடத்தில் திருமணம் அமையும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X