கேளுங்க சொல்கிறோம்
ஜூன் 02,2023,10:38  IST

கே.ரவி, சிதம்பரம், கடலுார்.
*மனதில் நிம்மதி இல்லையே... என்ன செய்யலாம்?
தேவையற்ற பொருட்களால் வீடு குப்பையாகிறது. கூடாநட்பு, பேராசையால் மனம் குப்பையாகிறது. நிம்மதி வேண்டும் என்றால் குப்பையை துாக்கி எறியுங்கள்.

எம்.உஷா, திருநகர், மதுரை.
*அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ எந்தக் கடவுளை வழிபட வேண்டும்?
எந்தக் கடவுளையும் வழிபடலாம். ஆசைகளைக் குறையுங்கள். அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழலாம்.

ஏ.சுந்தரராமன், வில்லிவாக்கம், சென்னை.
*கணவரின் விருப்பம் இல்லாமல் பீமரதசாந்தி நடத்தலாமா?
சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் ஆகியவையும் திருமணங்களே. இவற்றை தம்பதியராக சேர்ந்து நடத்துவதே முறை.

எம்.சீதாராமன், பணகுடி, திருநெல்வேலி.
*கடவுளிடம் நம் பிரார்த்தனைகளை எப்படி கேட்க வேண்டும்?
பிரார்த்தனைகளை உரிமையுடன் கேட்கலாம். கேட்டதையெல்லாம் கடவுள் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாது. நமக்கு எது தேவையோ அதை அவர் தருவார்.

எஸ்.சுப்பிரமணியன், உடுமலைப்பேட்டை, திருப்பூர்.
*கோயிலில் கேட்பாரற்றுக் கிடக்கும் நந்தவனப் பூக்களை பூஜைக்கு உபயோகிக்கலாமா?
பூக்களை மாலையாகத் தொடுத்து அந்த கோயிலில் நடக்கும் பூஜைகளுக்குக் கொடுங்கள். உங்களுக்கு புண்ணியம்.

கே.நிவாஸ், கனகபுரா, பெங்களூரு.
*சரியை, கிரியை, யோகம், ஞானம் என்றால் என்ன?
பூஜைகளுக்கு உதவுதல் சரியை. பூஜை செய்தல் கிரியை. பிராணாயாமம் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடுதல் யோகம். இவற்றால் பெறப்படும் பக்குவமே ஞானம்.

எஸ்.ராஜாமணி, தென்தாமரைக்குளம், கன்னியாகுமரி.
*தினந்தோறும் விளக்குத் திரியை மாற்ற வேண்டுமா?
தேவையில்லை. முடிந்த வரை உபயோகிக்கலாம்.

எம்.செல்லம், வேடசந்துார், திண்டுக்கல்.
*சில ஆண்டாக குலதெய்வ வழிபாடு தடை பட்டுள்ளது. மீண்டும் தொடர என்ன வழி?
விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து விட்டு குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

க.கோகிலா, சாந்தினிசவுக், டில்லி.
*சிறு கோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடத்த வேண்டும்?
காலை மட்டும் (ஒரு காலம்) அல்லது காலை, மாலை (இரு காலம்) பூஜை நடத்தலாம்.

எல்.பிச்சமுத்து, கடப்பேரி, செங்கல்பட்டு.
*விசேஷ வீடுகளில் வாழை, கரும்பு தோரணம் கட்டுவது ஏன்?
சுபநிகழ்ச்சிக்கு செல்லும் போது நாம் அலங்காரம் செய்து கொண்டு தானே செல்வோம். அது போலத்தான் வீடும். இது மங்கலத்தின் அடையாளம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X