உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

கே.கயல்விழி, ஆரல்வாய்மொழி கன்னியாகுமரி.*வெள்ளிக்கிழமையன்று விளக்கைத் துலக்கலாமா?ஞாயிறு, வியாழனன்று மட்டுமே துலக்குங்கள். கே.ஆனந்த், துவாரகா, டில்லி.*பிரசாதம், அன்னதானம் - வேறுபாடு என்ன?சுவாமிக்கு நைவேத்யம் செய்வது பிரசாதம் உணவை தர்மம் செய்வது அன்னதானம். சி.சந்தோஷ், அணைப்பட்டி திண்டுக்கல்.*பாகவதம், பாகவதர் விளக்கம் தேவை. பகவான் என்பது கடவுளைக் குறிக்கும். பகவானின் மகிமைகளை விளக்குவது பாகவதம். அதை மக்களிடையே பரப்புபவர்கள் பாகவதர்கள்.எம்.கோகிலா, குன்றத்துார் காஞ்சிபுரம்.*குழந்தைகளின் தங்க அரைஞாண் கயிற்றில் என்ன கோர்க்கலாம்?நாய்க்காசு, தாயத்து, மாங்காய் காசுகளை கோர்க்கலாம். வி.கவிதா, உசிலம்பட்டி மதுரை.*விரதமிருக்க ஏற்ற மாதம் எது?எல்லா கடவுளுக்கும் விரதமிருக்க மார்கழி ஏற்றது. விநாயகர் - ஆவணி பெருமாள், அம்பிகை - புரட்டாசி, சிவபெருமான் ஐயப்பன் - கார்த்திகை மாதங்கள் ஏற்றவை.வி.கேசவன், மாகடி பெங்களூரு.*தேடிச் சென்று பிச்சை கொடுத்தால் புண்ணியம் சேருமா...தேடிச் சென்று கொடுப்பது புண்ணியமே. இந்தியாவில் பிச்சைக்காரர் தொல்லை அதிகம் இருப்பதால் வெளிநாட்டினர் நம்மை கேலி செய்கின்றனர். ஓ.ரவிச்சந்திரன், சூலுார் கோயம்புத்துார்.*தாத்தாவின் குணம் பேரனுக்கும், பாட்டியின் குணம் பேத்திக்கும் வருமா...இதை பரம்பரை குணம் என்பார்கள். இப்படி குணம் வர வாய்ப்புண்டு. மாறவும் இடம் உண்டு. டி.பவதாரிணி, திரிசூலம் சென்னை.*பசுவின் கொம்பால் அபிஷேகம் செய்யலாமா...தங்க கலசத்தை விட பசுவின் கொம்பால் அபிேஷகம் செய்வது உயர்வானது.பி.வினோதினி, நத்தப்பட்டு கடலுார்.*சந்திரசேகர் என்பதன் பொருள் என்ன?சந்திரன் என்றால் 'நிலவு'. சேகர என்றால் 'தலையில் அணிவது'. பிறையைச் சூடியிருக்கும் சிவபெருமானுக்கு 'சந்திர சேகரன்' என்று பெயர்.எல்.மகாதேவன், நாங்குநேரி திருநெல்வேலி.*முருகனைப் போல் சிவனுக்கும் படைவீடு உண்டா?முருகனுக்கு இருப்பது போல் சிவபெருமானுக்கு ஐந்து, ஏழு, எட்டு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் கோயில்கள் உள்ளன. உதாரணமாக சப்த(ஏழு) விடங்கம் (உளியால் செதுக்கப்படாத சிவலிங்கம் உள்ள கோயில்கள்) அட்ட(எட்டு) வீரட்டம் (வீரச்செயல் புரிந்த தலங்கள்) சிறப்பானவை.