உள்ளூர் செய்திகள்

சொர்க்கவாசல் திறக்குது! யோகம் மலருது!

திருப்பாணாழ்வாரின் பாசுரத்தை படித்தால் யோகம் உண்டாகும்.அமலனாதி பிரானடியார்க்கு என்னை ஆட்படுத்தவிமலன் விண்ணவர் கோன் விரையார்பொழில் வேங்கடவன்நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான் திருக்கமலபாதம் வந்தென் கண்ணி னுள்ளன வொக்கின்றதே.உவந்த உள்ளத்தனா யுலகமளந் தண்டமுறநிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைகவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்சிவந்த ஆடையின் மேல்சென்ற தாமென் சிந்தனையே.மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்சந்தி செய்ய நின்றான் அரங்கத் தரவின் அணையான்அந்தி போல்நிறத் தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோரெழில் உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத் தின்னுயிரே.சதுரமா மதிள்சூழ் இலங்கைக்கு இறைவன் தலைபத்துஉதிர வோட்டிஓர் வெங்கணை உய்த்தவ னோத வண்ணன்மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத் தம்மான் திருவயிற்றுஉதரபந்தனம் என்னுள்ளத்துள் நின்று உலாவுகின்றதே.பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத் தன்வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்கோர மாதவம் செய்தனன் கொலறியேன் அரங்கத் தம்மான்திருவார மார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.துண்ட வெண்பிறை யான்துயர் தீர்த்தவன் அஞ்சிறையவண்டுவாழ் பொழில் சூழரங்க நகர் மேயவப்பன்அண்ட ரண்ட பகிரண்டத்தொரு மாநிலம் எழுமால்வரை முற்றும்உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே.கையினார் சுரிசங்கன லாழியர் நீள்வரை போல்மெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடியெம்ஐயனார் அணியரங்கனார் அரவின் அணைமிசைமேய மாயனார் செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே.பரிய னாகி வந்த அவுணன் உடல்கீண்ட அமரர்க்குஅரிய ஆதிபிரான் அரங்கத்து அமலன் முகத்துகரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப்பெரிய வாய் கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே.ஆலமாமரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய்ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத் தரவின் அணையான் கோலமாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோர் எழில்நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானைஅண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே.