உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வாழ்த்துங்கள் வாழ்த்தப்படுவீர்கள்!* வீழுகிற போதுகைகொட்டிச்சிரிக்கிறவரிடையேதூக்கி விடுவதற்காய்நீட்டுகிறகைகள்தான்தேவனின் கரங்கள்!* எழுகிற போதெல்லாம்தலையில்குட்டுகிறவர்களைக்காட்டிலும்தோளைதட்டிக் கொடுப்பவர்கள்தான்கடவுளின் காதலர்கள்!* கொட்டிக் கிடப்பதுபணமாய் இருப்பினும்,குப்பைதான்உதவாதவரை...தட்டில் இட்டதுகூழாய் இருந்தாலும்,அமிர்தம்தான்உழைப்பில் வர!* அம்மாவின்கண் மையைகைகளில்அப்பிக் கொண்டுசுவர்களில்அச்சுப் பதிக்கிறகுழந்தைதான்...நீங்கள்வாழ்த்துகிற போதுபிக்காசோவாகிறான்வைகிற போதோபிசாசாய் ஆகிறான்!* மகனின்வராத மதிப்பெண்களுக்காகவார்த்தைகளை இறைப்பதை விட -தேர்வில்வாங்க வேண்டியமதிப்பெண்களுக்காகஅரவணைப்பதுஅர்த்தமுள்ளது!* எப்போதும்உங்கள்அலுவலக மேஜையைசுத்தம் செய்துசெல்பவனைக் காட்டிலும்இன்றுஉங்கள்பேனாக் கூண்டில்ஒற்றைரோஜாவைச்சொருகிப் போனபுதிய தொழிலாளியைபாராட்டுங்கள்...ரோஜா மலரும் அவனுள்ளும்!* காலமெல்லாம்தோழமையோடு...கரம் கோர்த்துஇரண்டாவதுஅவதாரமாய்வலம் வருபவள்மனைவி...நகைப்பூச்சாய்திரிகிற பெண்களிடையேஅவளின்எளிமையானநகப்பூச்சு மாற்றத்தைக் கூடபாராட்டுங்களேன்...முத்தங்கள் கூடும்!* சிறியதோபெரியதோசாதனைகளல்ல முக்கியம்சாதிக்க நினைக்கிறமுயற்சிகள்தான் முக்கியம்...மாறுபடுகிறஎண்ணங்களேமாற்றங்களை விதைக்கும்...இனம் கண்டுவாழ்த்துங்கள்வாழ்த்துங்கள்...வாழ்த்தப்படுவீர்கள்வாழ்ந்த பிறகும்!— முருகானந்தன், திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !