உள்ளூர் செய்திகள்

சிறு தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டிய பொருட்கள்

இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான புரோட்டீன் சத்து, கொழுப்பு சத்து, சர்க்கரை சத்து இல்லாத தானிய வகைகள் குறைவாக உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த கேழ்வரகு, ராகி ஆகியவற்றில் இருந்து மதிப்பு கூட்டிய பொருட்களாக அவுல் வகையில் மதிப்பு கூட்டிய பொருட்களாக கடந்த ஐந்து ஆண்டுகளாக உணவு பதனிடும் துறையில் கோவை மாவட்டத்தில் மாலா என்பவர் பல சேவைகளை செய்து வருகிறார்.சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, ராகி ஆகியவற்றை இயற்கை முறையில் உற்பத்தி செய்து சான்றிதழ் பெற்ற விவசாயிகளிடம் இருந்து அவர் பெற்றுக்கொள்கிறார். மதிப்பு கூட்டும் தொழிலில் இவர் முதலீடாக ஒரு லட்சம் ரூபாய்க்கு இயந்திர தளவாடங்களை வாங்கியுள்ளார். உற்பத்தி செய்யப்பட்ட சிறுதானியம், மதிப்பு கூட்டிய பொருட்களை வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை மூலமாக தொழில் ரீதியில் விற்பனை செய்து வருகிறார். இவர் உற்பத்தி செய்த மதிப்பு கூட்டிய பொருட்கள் பழமுதிர்ச்சோலை, உழவர்சந்தை, நீல்கிரிஸ் பல்பொருள் அங்காடி ஆகியவற்றில் கிடைக்கின்றன. இது மட்டுமல்லாமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட சேமியா ஆகியவற்றையும் பொதுமக்களுக்கு கொடுத்து விற்பனை செய்து வருகிறார். தொடர்புக்கு: மாலா, கோவை, 94433 49748.-கே.சத்தியபிரபா, உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !