உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  குருவாயூர் கிருஷ்ணா் கோவில் ஏகாதசி உற்சவம் கோலாகலம்

 குருவாயூர் கிருஷ்ணா் கோவில் ஏகாதசி உற்சவம் கோலாகலம்

பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஏகாதசி உற்சவம் வெகு விமர்சியாக நடந்தது. கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், கார்த்திகை மாதத்தில் ஏகாதசி உற்சவம் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு ஏகாதசி உற்சவம் நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு, திருவல்ல ராதாகிருஷ்ணன் மாரார் தலைமையில், செண்டை மேளம் முழங்க, 'இந்திரசென்' என்ற யானை மீது உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை, 9:00 மணிக்கு, பார்த்தசாரதி கோவிலுக்கு, பல்லசேனா முரளி மாரார் தலைமையில், பஞ்சவாத்தியம் முழங்க, மூன்று யானைகளின் அணிவகுப்பில் உற்சவர் எழுந்தருளினார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. ஏகாதசி நோன்பு இருக்கும் பக்தர்களுக்கு, சிறப்பு கோதுமை சாப்பாடு மற்றும் கிழங்கு வகை, பயிர் வகை பிரசாதங்களும் வழங்கப்பட்டது. ஏகாதசி உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்ட நடை, இன்று (2ம் தேதி) காலை, 7:00 மணிக்கு அடைக்கப்படுகிறது.அதன்பின், வழக்கமான பூஜைகளுடன் மாலை, 3:30 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு நடை திறக்கப்படும். ஏகாதசி உற்சவம் நாளை (3ம் தேதி) நிறைவுபெறுகிறது. விழாவையொட்டி, கோவில் முன்பாக உள்ள மேல்ப்புத்தூர் கலையரங்கில் நடந்த செம்பை சங்கீத உற்சவம், நேற்று இரவு 10:00 மணிக்கு செம்பை வைத்தியநாத பாகவதருக்கு பிடித்தமான கீர்த்தனை பாடலுடன் நிறைவடைந்தது. கோவில் கலையரங்கில், 15 நாட்கள் நடந்த சங்கீத உற்சவத்தில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங் கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ