உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முடிந்தால் என்னையும் சிறையில் அடையுங்கள்; மம்தா பானர்ஜி ஆவேசம்

முடிந்தால் என்னையும் சிறையில் அடையுங்கள்; மம்தா பானர்ஜி ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: பெங்காலி மொழி பேசும் மேற்கு வங்க மக்களை கைது செய்யும் மத்திய பா.ஜ., அரசுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். முடிந்தால் பெங்காலி பேசும் தன்னை சிறையில் அடைக்குமாறு சவால் விட்டுள்ளார். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பெங்காலி மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து கோல்கட்டாவில் முதல்வர் மம்தா தலைமையில் மாபெரும் கண்டன பேரணி நடத்தப்பட்டது. இதில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். மழை பெய்த போதும், கொட்டும் மழையில் சுமார் 3 கி.மீட்டர் தூரத்திற்கு மம்தா பானர்ஜி பேரணி சென்றார். சுமார் 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பேரணிக்குப் பிறகு முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், 'இன்னும் அதிகமாக பெங்காலி மொழியில் பேச முடிவு செய்துள்ளேன். முடிந்தால் என்னை சிறையில் அடையுங்கள். அண்டை நாடான வங்கதேசத்தினர் என சந்தேகிக்கப்பட்டவர்களை கைது செய்து சிறை முகாமில் வைத்துள்ளதாக பா.ஜ., அரசு கூறியுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது. 'பெங்காலி பேசுவோரை எல்லாம் சிறையில் வைப்பீர்களா? மேற்கு வங்க மக்களிடம் அடையாள அட்டைகள் உள்ளன. திறமை இருப்பதால் பிற மாநிலங்களில் மேற்கு வங்க மக்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் பெங்காலி மொழி பேசியதற்காக கைது செய்ய முயற்சிக்கிறீர்கள். உங்களுக்கு இந்த உரிமை யார் கொடுத்தது? வங்காளம் இந்தியாவின் பகுதி இல்லையா, என்று கேட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 17, 2025 11:39

அரசியல் பூலான் தேவி


V.Mohan
ஜூலை 17, 2025 00:12

இந்த அழுகுனி மம்முதா பேகம், ஒரு மாநிலத்தை ஆளூம் தகுதியற்றவர். ரவுடிகளை கையில் வைத்துக் கொண்டு அராஜக சர்வாதிகாரம் செய்கிறார். இத்தனைக்கும் காரணம் புத்திசாலிகள் என போற்றப்படும் பெங்காலி மக்கள் ஒரு அடாவடி அரசியல்வாதியை அரசமைக்க தொடர்ச்சியாக தேர்வு செய்வது தான். அதிக புத்திசாலிகளாக உள்ள மக்கள் இடதுசாரிகளின் வார்த்தைஜால வலையில் விழுந்து கடவுளை வணங்குபவர்களை, நாட்டை தாயாக வணங்குபவர்களை எல்லாம் கீழானவர்களாக சித்தரிக்கும் அதிகார போதை தான் எல்லாவற்றிற்கும் காரணம். பங்களா தேசத்தவரை குடியமர்த்தி ஓட்டு வாங்கிய மம்முதா பேகம் பங்களாதேச ராணுவ ஜெனரல்பேசிய ""48 மணி நேரத்தில் கொல்கத்தாவை பிடிப்போம்""" என்ற அடாவடி பேச்சுக்குத்தான் பயந்து இந்திய ராணுவத்தை உதவிக்கு அழைத்தார். இவரை அடுத்த முறையும் வங்காள மக்கள் தேர்ந்தெடுத்தால் மேற்கு வங்காளத்துக்கு விடிமோட்சம் வராது. ஙா


Sundar R
ஜூலை 16, 2025 22:13

Nothing to do with attack on Bengali speaking people in BJP ruled states. Mamta is raising pitch because tomorrow ModiJi will be coming to Kolkata and West Bengal Assembly Election due in 2026 is fast approaching.


G Mahalingam
ஜூலை 16, 2025 21:28

திருட்டு பங்களாதேஷ் மூலமாக 1 கோடி பேர் மம்தாவுக்கு ஆதரவு தருகிறார்கள். வாக்கு அளிக்கிறார்கள். கோபம் வரத்தான் செய்யும் .


Anonymous
ஜூலை 16, 2025 20:32

வங்காளத்துக்கு முதல் அமைச்சர் நீங்க தான், சட்டம் ஒழுங்கு அமைச்சரும் நீங்க தான், உங்களுக்கு யாரு கைது , செய்து தண்டனை கொடுப்பது? அடுத்த ஆஸ்கார் விருது உங்களுக்கு தான் மேடம், சூப்பர் நடிப்பு.


Ramesh Sargam
ஜூலை 16, 2025 19:46

மம்தா அடைக்கப்படவேண்டியது சிறையில் அல்ல. ஒரு சிறந்த மனநல மருத்துவமனையில்.


GMM
ஜூலை 16, 2025 19:36

குடிமகனை அடையாளப்படுத்த மம்தா அடையாள அட்டை போதாது . உள்ளாட்சி அமைப்பின் பிறப்பு, பள்ளி சான்று தேவை .


jss
ஜூலை 16, 2025 19:33

நீ என்ன பெரிய அப்பாடக்கரா. after all a முதல்வர். குற்றம் புரிந்தால் உம்மையும் உள்ளே போடுவார்கள். அடுத்த தேர்தலில் மக்களே உங்களை வீட்டுக்கு அனுப்புவார்கள்.


GMM
ஜூலை 16, 2025 19:31

பெங்கால் பேச கூடிய கிருத்துவ, முஸ்லீம், இந்து....னைவரும் இந்திய குடிமகன் கிடையாது. பங்களாதேஷ் ஊடுருவலும் எல்லை. இந்திய நாட்டவர் அல்லாத வங்கதேச மொழி பேசும் பங்களாதேஷ் மதம் மாறிகளை மத்திய அரசும் , மம்தா பானர்ஜி நிர்வாகமும் வெளியேற்ற வேண்டும்.


saravan
ஜூலை 16, 2025 19:20

முதலில் மத்திய அரசு அதை செய்திருக்க வேண்டும்


புதிய வீடியோ