உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இறந்தது 83 லட்சம் பேர், நீக்கப்பட்டதோ 1.15 லட்சம் மட்டுமே; ஆதார் ஆணையம் அதிர்ச்சி!

இறந்தது 83 லட்சம் பேர், நீக்கப்பட்டதோ 1.15 லட்சம் மட்டுமே; ஆதார் ஆணையம் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இறந்துபோன 83 லட்சம் பேர்களில் வெறும் 1.15 லட்சம் பேரின் பெயர்கள் மட்டுமே ஆதார் தகவல் தொகுப்பில் இருந்து நீக்கப்பட்ட விவரம் வெளியாகி இருக்கிறது.அரசின் எந்த உதவி அல்லது சலுகை, இருப்பிட சான்று என பெரும்பாலான தேவைகளுக்கு ஆதார் அட்டை அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது. ஆதார் அட்டை வேண்டி தினமும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன் விவரம் வருமாறு: நாட்டில் தற்போது 142.39 கோடி ஆதார் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கை ஜூன் 2025 வரை மட்டுமே. ஐ.நா. பதிவின் படி இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை(ஏப்.2025 வரை) 146.39 கோடி ஆகும்.ஆனால் பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களை பதிவு செய்யும் மக்கள் பதிவு அமைப்பு படி, 2007ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டுக்குள் பதிவான இறப்புகள் 83.5 லட்சம் பேர். அதாவது 2007-2019க்குள் மட்டுமே மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 83.5 லட்சம்.காலமானவர்களின் பெயர்களை ஆதார் தகவல் தொகுப்பில் இருந்து UIDAI ஆணையம் நீக்குவது வழக்கம். இந்த கணக்கீட்டின்படி ஒட்டுமொத்தமாக இறந்தவர்களில், வெறும் 10 சதவீதம் பெயர்கள் மட்டுமே நிரந்தரமாக நீக்கப்பட்டு உள்ளது.சம்பந்தப்பட்ட மாநில அரசின் இறப்பு சான்றிதழ், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தரும் தகவல்கள் ஆகியவற்றை பொறுத்து தான் ஆதார் தகவல் தொகுப்பில் இருந்து பெயர்கள் நீக்கப்படுகின்றன. இது மிகவும் சிரமத்தை தருவதாக உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆதார் அட்டை வைத்து இருப்போரின் இறுதியான எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரங்கள் இல்லாதது, உயிரிழந்த பின்னரும், அவர்களின் ஆதார் அட்டை இன்னமும் செயலாக்கத்தில் உள்ளதாக காட்டப்படுவது ஆகிய சிக்கல்கள் இருப்பதாக, இந்திய தனித்துவ அடையாள ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இறப்போரின் முறையான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆதார் எண் உடனுக்குடன் நீக்கப்படுவதே இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என்கின்றனர் வல்லுநர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

R Vijayaraghavan
ஜூலை 16, 2025 20:00

ஒருவர் இறந்து போகும் போது அவரது ஈமச்சடங்கின் போது ஆதார் கார்டு காப்பிய கேட்கிறார்கள். அதை வெரிபய் செய்த பின் தான் எரிக்க அனுமதிக்கிறார்கள். அப்போதே அவருடைய ஆதார் எண்ணை நீக்க ஏற்பாடு செய்யலாமே.


vbs manian
ஜூலை 16, 2025 18:27

பென்ஷன் மற்றும் சலுகைகளை யாரோ இன்னும் அனுபவிப்பார்கள்.


venugopal s
ஜூலை 16, 2025 17:50

இறந்தவர் ஆதார் விவரத்தை இறந்தவர் கொடுக்க முடியாது, மற்ற உறவினர்களுக்கு அக்கறை இருக்காது! சம்பந்தப்பட்ட மத்திய மத்திய அரசோ அல்லது மாநில அரசோ தான் இதற்கு சரியான வழிமுறை தேட வேண்டும்!


என்றும் இந்தியன்
ஜூலை 16, 2025 16:13

இறந்துபோன 83 லட்சம் பேர்களில் வெறும் 1.15 லட்சம் பேரின் பெயர்கள் மட்டுமே ஆதார் தகவல் தொகுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. திருட்டு திராவிட டாஸ்மாக்கினாட்டில் ......லட்சம் என்று சொன்னால் அதற்கு விளக்கம் இப்படி இருக்கும். "அவர்கள் உடலளவில் இறந்தாலும் அவர்கள் இன்னும் இங்கு தான் இருக்கின்றனர் சுவர்க்கம் / நரகம் இதில் நோ என்ட்ரி போடப்பட்டுள்ளது பிஜேபியினால் ஆகவே அவர்களுக்கு ஆவன செய்ய இந்த திராவிட மாடல் அரசு பாடுபடுகின்றது" - இப்படிக்கு சுடலை மாயாண்டி ஜோசப் கான்


saravan
ஜூலை 16, 2025 15:13

இதை அரசு பிறப்பை வெப் சைட் இல் நடைமுறை படுத்த வேண்டும் இரண்டுக்குமே காசு கேக்குரானையா பாவிப்பய அரசு அதிகாரி இது உலகத்தில் எங்கும் கிடையாது இது வாக்கிற்க்காக காங்கிரஸ் செய்யத சூழ்ச்சி


GMM
ஜூலை 16, 2025 15:13

ஆதார் அட்டை மக்களுக்கு தேசிய அளவில் ஒருங்கிணைந்து பராமரிப்பு வழங்கல். ஆனால்,. இறப்பு சான்று உள்ளாட்சி அமைப்புகள் மட்டும் பராமரிக்கும். நாடு முழுவதும் பிறப்பு, இறப்பு சான்று ஒரு அமைப்பு கீழ் இருக்க வேண்டும். இதில் மாநிலங்கள் குறுக்கீடு கூடாது.


R S BALA
ஜூலை 16, 2025 13:53

கணக்கிற்கு இது தவறுதான், ஆனால் ஒருவரது ஆதார் அட்டையினை விழித்திரை கைரேகை பதிவுகள் இருப்பதால் அதனை பயன்படுத்துவது சாத்தியமில்லை மேலும் ஆதார் 10 வருடத்திற்கு புதுப்பிப்பு தேவை என்பதை கட்டாயமாக்கினாலே தானாக இறந்தவர்கள் ஆதார் அட்டை செயலிழந்துவிடும். கணக்கு சரியாகிவிடும்.


Tiruchanur
ஜூலை 16, 2025 13:44

ஆதார் கார்டுக்கு Periodic Renewal Procedure அவ்வப்போது புதுப்பித்தல் செயல்முறை ஒன்றை கொண்டு வரவேண்டும். 2.5 வருடங்களுக்கு ஒரு முறை செய்தால் நல்லது. ஒவ்வொரு பொது தேர்தலுக்கு முன்னும், மாநில தேர்தலுக்கு முன்னும் செய்து, வோட்டர் ID யையும் சரிசெய்தால் நல்லது


G.Kirubakaran
ஜூலை 16, 2025 13:35

மாநில அரசுகள், இறப்புச்சான்றிதழ் நகல்களை, ஆதார் அதிகாரிகளுக்கு அனுப்ப சட்டம் வேண்டும்


Padmasridharan
ஜூலை 16, 2025 13:35

ஒருத்தர் இறந்ததை கூட பணமாக்குகின்றனர். இருக்கும்போது நல்ல சாப்பாடு போடறாங்களோ இல்லையோ இறந்தபின் தங்க ரதம், வெள்ளி ரதம் எதற்கு. சூடு/இடு காட்டில் இலவசம் என்று சொல்லி இறப்புக்கு ரசீது கொடுக்கும்போது கூட ஆயிரக்கணக்கில் பணத்தை கேட்கின்றனர். ஏண்டா பிறந்தோம், ஏன் வாழ்கிறோமென்று நினைத்து கொண்டிருக்கையில் ஏண்டா செத்தா கூடவா வியாபாரம் பண்றீங்கன்னு கேட்கத்தோனுது. இப்படி இருக்கையில் ஒரு வோட்டு பெறுவதற்காக இருப்பவர்களின் பெயரை விட்டுவிட்டு இறப்பவர்களின் பெயர்களை சேர்த்து வைத்துக்கொண்டு அரசியலதிகார நாடக நடிகர்களின் திருவிளையாடல் வேறு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை