உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  வந்தே மாதரம் விவாதத்தில் நேருவின் உண்மை முகம் வெளிப்படும்: பா.ஜ.,

 வந்தே மாதரம் விவாதத்தில் நேருவின் உண்மை முகம் வெளிப்படும்: பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: “பார்லி.,யில் வந்தே மாதரம் பாடல் தொடர்பான விவாதத்தில், மறைந்த காங்., பிரதமர் நேருவின் உண்மையான முகம் வெளிப்படும்,” என, பா.ஜ., லோக்சபா எம்.பி., சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.நாட்டின் தேசிய பாடலான, 'வந்தே மாதரம்' இயற்றி, 150 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை குறிக்கும் வகையில், லோக்சபாவில் இன்று நடக்கும் சிறப்பு விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். ராஜ்யசபாவில் நாளை விவாதம் நடக்கிறது.நாட்டின் முதல் பிரதமரான காங்கிரசைச் சேர்ந்த மறைந்த நேரு, வந்தே மாதரம் பாடலில் சில வரிகளை நீக்கியதாகக் கூறப்படும் நிலையில், இந்த விவாதம் நடக்கிறது. இதற்கிடையே, 'நேருவை இழிவுபடுத்துவதே பா.ஜ.,வின் லட்சியம்' என, பார்லி., - காங்., குழு தலைவர் சோனியா சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.இந்நிலையில், டில்லியில், பா.ஜ., லோக்சபா எம்.பி.,யும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா நேற்று கூறியதாவது: நேருவின் பாரம்பரியத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக, சர்தார் வல்லபபாய் படேல், அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் பாரம்பரியத்தை திட்டமிட்டே காங்., மூடி மறைத்தது. நேருவின் புகழை நாங்கள் கெடுக்கவில்லை; களங்கம் ஏற்படுத்தவில்லை.'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் ஜாமினில் வெளியே உள்ள சோனியா, ராகுல் போன்றோர் தான் அவரது பெயரை கெடுக்கும் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.'வந்தே மாதரம்' பாடல் இயற்றப்பட்ட போது, முஸ்லிம்களை திருப்திப்படுத்த குறிப்பிட்ட சில வரிகளை நேரு நீக்கினார். அதுவே நாடு பிளவுபட வழிவகுத்தது. வந்தே மாதரம் பாடல் குறித்து நடக்கும் விவாதத்தில், அவரின் உண்மையான முகம் வெளிப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Sridhar
டிச 08, 2025 15:37

வந்தேமாதரம் பற்றி பேசினால் நேருவின் புகழுக்கு மாசு ஏற்படும்னு ஏன் சோனியா நினைக்கணும்? இந்திய சுதந்திரத்திற்கு நேரு ஒருவர்தான் போராடினாரா? அந்த ஒருவரை பார்த்து வெள்ளையன் பயந்து ஓடிவிட்டானா? இல்ல, நிறைய பேரு சேர்ந்து போராடினாங்களா? அப்போ அவங்கெல்லாம் எங்க இப்போ? ஏன் நமம எல்லாரும் நேருவை பத்தி மட்டும் பேசிட்டுருக்கோம்? ஏன் அவுங்க குடும்பம் மட்டும் பரம்பரை பரம்பரையா ஆட்சி செஞ்சதோட மட்டுமில்லாம மீண்டும் ஆட்சி செய்ய எல்லா பிரம்ம பிரயர்த்தனுங்களும் செஞ்சிகிட்டு இருக்காங்க?


Rajarajan
டிச 08, 2025 14:56

பங்காளி சண்டையில், யார் நாட்டை ஆள்வது என்ற பிரச்சினைதான், இந்தியாவின் பிரிவினைக்கு வித்திட்டது.


தமிழ்வேள்
டிச 08, 2025 14:10

அனைத்து புகழும் ...


M Ramachandran
டிச 08, 2025 14:02

மோசமான கால கட்டம் காங்கிரெஸ்ஸார் கொண்டு வந்த இருளான கால கட்டத்தை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு தெரியும். ஒரு உதாரணம் ஒரு கன்னட அபேசும் ஒரு நண்பர் அந்த எமெர்ஜென்சி காலத்தில் அவர் தமிழ்நாட்டிற்கு வரவேண்டி இருந்தது. அவர் திருநெல்வேலியில் ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். அங்கு வந்த காவல் துறை அவரைய காவல் நிலத்திற்கு அழைத்து என்று ஒரு இரவு முழுக்க காவல் நிலயத்தில் தங்க வைத்து அவர் தீவிர வாதி என்று அவர்களென FIR போட்டு பொறகு அவருக்கு ஹீவிர வாதி களுக்கும் ஒரு ஹோடர்பும் மில்லையய என்று தெரிந்து காலையில் விட்டு விட்டனர். பிர் பதிவு நீக்க படவில்லை. அவர் பிற்காலத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைய்க்கு சேர்ந்தார். 5 ஆண்டுகளுக்கு அரசு அலுவலக்தில் adminstrative ஆபிஸ்ர் இவர் மீது குற்ற பத்திரிக்கைட்ட தாக்கல் இருக்கு அதனால் வேலயை விட்டு நீக்க படுவார் என்று அவருக்கு மெமோ கொடுத்து விட்டார்கள். அவ்வமயம் CHIEF Admistrative Officer ஆக்க இருந்தவர் IAS Officer. அவர் அட்மினில் தன்னைக்கு கீழ் வேலை செய்யும் அலுவலரை கூப்பிட்டு எமர்ஜெண்சி நேரத்தில் பல தவறுகள் நேர்ந்த்து விட்டன. சென்ற 5 வருடமாக ஏற்காதாவது அவர் மேல் இங்கு மேல் நட வடிக்கை அவர் மேல் இருக்கா என்று கேட்டர். அவர் வேலை செய்யும் அவருடைய மேல் அதிகாரி நன்னடத்தை பற்றி ஏதாவது புகார் இருக்கா என்று கேட்டர். நன்றாக இருப்பதை உறுதி செய்துள்ளார். அப்போது நடவடிக்கை வேண்டாம் என்று முடித்து வைத்தார். இனொரு நண்பர் சென்னையை சென்ட்ரலில் இருந்து கோவைய்யக்கு பயணம் செய்யும் போது loos டால்க்கிங் பேசும் அப்போவது உள்ள இந்திரா ஆட்சியை ஏதோ பேச எதிர்த்து உடாகர்ந்திருந்த ஒருவர் நான் காவல் துறையை சேர்ந்தவன் மப்பிடியில் இருக்கேன். இப்போனது நினைத்தாலும் உங்களை கைது செய்ய முடியும். வீடு சென்று சேரும் வேலை பாருங்க என்று கூறினார். நண்பருக்கு கதி களிங்கி விட்டது. அப்போது எமெர்ஜெண்சியின் போது பல காங்கரஸ் பெரும் தலைவர்கள் காமராஜர் உட்பட சிறையில் தள்ள பட்டர்கள்.


Barakat Ali
டிச 08, 2025 12:11

வந்தே மாதரம் பாடல் மூலம் இந்தியாவை தேசத்தாயாக உருவகப்படுத்தி வணங்குவது


cpv s
டிச 08, 2025 10:32

india must be d as a hindu country, who ever want to live or go out from from india


V RAMASWAMY
டிச 08, 2025 11:35

High time Bharat d herself as HINDUSTAN, if neessary through statute or Constitutional amendments.


R.RAMACHANDRAN
டிச 08, 2025 10:08

மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக இந்த நாட்டில் யாரும் கட்சி நடத்தவில்லை. ஆட்சி அதிகாரங்களை லஞ்ச ஊழல் மிக்க அதிகார வர்க்கத்திடம் ஒப்படைத்துவிட்டு எதிர் கட்சிகளை எப்படி ஒடுக்கி ஆட்சியில் தொடரலாம் என்பதற்கான பணிகளில் 24 மணி நேரமும் ஈடுபடுவதால் இந்த நாட்டில் லஞ்சம் இன்றேல் சேவை இல்லை லஞ்சம் கொடுப்பவர்களுக்காக எத்தகைய குற்றத்தையும் செய்வோம் அதனை யாரும் எதிர்த்து போராடக் கூடாது என்ற வகையில் அதிகார வர்கம் ஆணவத்துடன் செயல்படுகிறது.


K V Ramadoss
டிச 08, 2025 12:36

வந்தேமாதரம் பாடலை கொண்டாடினால் அது எதிகட்சிகளை ஒடுக்குவது , லஞ்ச ஊழலை வளர்ப்பது என்று அர்த்தமா ? என்னே உங்கள் அபார மூளை


தமிழ்வேள்
டிச 08, 2025 09:16

கண்மூடித்தனமாக நம்பியதன் விளைவு அறுபதாண்டு பாரத தேச துரோகம்.. தவிர்ப்பது கடினமாக இருந்தது..


பாலாஜி
டிச 08, 2025 08:54

ஜவஹர்லால் நேருவின் உண்மை முகம் இன்றைய ஆரம்ப கல்வி கற்கும் சிறு வயதினருக்கும் தெரியுமே?!


vivek
டிச 08, 2025 14:24

தற்குறி .....இன்றைய நேரு மீது 1020 கோடி ஊழல்.வழக்கு...இது எப்படி இருக்கு


G Mahalingam
டிச 08, 2025 08:25

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நேரு இந்திரா காந்தி ராஜீவ் காந்தி பெயரில் சுமார் 2000 மேற்பட்ட. விமான நிலையம்கள் ரோடுகள் பல்கலைக்கழகம். பல பள்ளிகள் கல்லூரிகள் என்று அவர்கள் பெயரிலேயே வைத்து இருக்கிறார்கள். இது அப்படியே இருக்கிறது.


Thravisham
டிச 08, 2025 10:53

சீனாவின் தந்தை வழிகாட்டி என போற்றப்படும் மாத்சேதுங்குக்கு ஓர் இடத்திலும் சிலைகள் பேரோ எங்கும் இல்லை. ஆனால் பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டிலோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை