உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10வது ஆண்டில் டிஜிட்டல் இந்தியா; வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என பிரதமர் மோடி பெருமிதம்

10வது ஆண்டில் டிஜிட்டல் இந்தியா; வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், இந்நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறி உள்ளார். கடந்த 2015ம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 1) டிஜிட்டல் இந்தியா திட்டம் துவங்கப்பட்டது. பிரதமர் மோடியால் துவங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கம் என்பது, நாட்டை டிஜிட்டல் துறையில் ஆற்றல் மிக்க ஒன்றாகவும், அறிவுசார் சமூகமாகவும் மாற்ற வேண்டும் என்பதே ஆகும். 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, இந்த நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது; நாம் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நமது நாட்டை டிஜிட்டல் ரீதியாக அதிகாரம் பெற்ற மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய சமூகமாக மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக டிஜிட்டல் இந்தியா தொடங்கியது.ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, எண்ணற்ற உயிர்களைத் தொட்டு, அதிகாரமளித்தலின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்த ஒரு பயணத்திற்கு நாம் சாட்சியாக நிற்கிறோம். 140 கோடி இந்தியர்களின் கூட்டு உறுதியால் இயக்கப்படும் டிஜிட்டல் கட்டணங்களில் இந்தியா பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளும் இந்த முயற்சியால் பயனடைந்துள்ளன.இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rock
ஜூலை 01, 2025 17:11

சகோ, கலிகாலம் கடந்துகொண்டிருக்கிறது மனதை மாற்றுங்கள் சொர்க்கத்தின் ஆட்சி பூமியில் வர உள்ளது. நீதியின் தீர்ப்பு அனைவருக்கும் வழங்கப்படும். தவறே செய்யாத இயேசு கிறிஸ்து, நம்மை நேசித்து, நம் பாவத்திற்காக தண்டனை பெற்றார். அவருடைய மரணத்தால் நம்முடைய தண்டனை நீக்கப்பட்டது. இதுவே நம் பாவத்திற்கான பரிகாரம். இதற்கும் மேல் ஏதேனும் பரிகாரம் உங்களுக்கு தெரிந்திருந்தால் தயவுசெய்து பகிருங்கள் எனவே, இவ்வுலக வாழ்விலும் அமைதியோடு வாழலாம், மற்றும் இறைவனுடன் என்றும் வாழும் வாழ்வையும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கலாம். இறைவன் நல்லவர்


Rock
ஜூலை 01, 2025 17:04

கேள்வி: இந்தியாவிற்கு வெளிநாடுகள் எவ்வளவு கடன் வழங்கியுள்ளன? அவர்களிடம் இருந்து ஆண்டுதோறும் செலுத்தும் வட்டி ரூபாயில் எவ்வளவு? பதில் 2024 நிலவரப்படி, நடுத்தர வட்டி விகிதம் அடிப்படையில்: 1. ஜப்பான் - ₹1.65 லட்சம் கோடி, வட்டி: 1% → வட்டி ₹1,650 கோடி/ஆண்டு 2. அமெரிக்கா - ₹1.4 லட்சம் கோடி, வட்டி: 2% → வட்டி ₹2,800 கோடி/ஆண்டு 3. ஜெர்மனி - ₹0.7 லட்சம் கோடி, வட்டி: 1.5% → வட்டி ₹1,050 கோடி/ஆண்டு 4. பிரான்ஸ் - ₹0.5 லட்சம் கோடி, வட்டி: 1.5% → வட்டி ₹750 கோடி/ஆண்டு 5. தென்கொரியா & ரஷ்யா - ₹0.6 லட்சம் கோடி, வட்டி: 2% → வட்டி ₹1,200 கோடி/ஆண்டு ➡️ மொத்த வெளிநாட்டு ஆண்டுக்கான வட்டி செலவுகள்: சுமார் ₹7,450 கோடி


Rock
ஜூலை 01, 2025 17:01

கேள்வி: இந்தியாவின் மத்திய அரசின் மொத்த கடன் எவ்வளவு? யார் யார் கடன் அளிக்கிறார்கள்? பதில்: 2025 மார்ச் நிலவரப்படி, மத்திய அரசின் மொத்த கடன் ₹181.74 லட்சம் கோடி. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களைக் கொண்டது. வெளிநாட்டு கடன் ADB, World Bank, வெளிநாட்டு அரசுகள் மற்றும் வணிக வங்கிகளிடம் உள்ளது. NRI கையளவுகளும், குறுகிய கால கடன்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த கடன், இந்தியாவின் GDP-வின் சுமார் 56% ஆகும்.


சிவம்
ஜூலை 01, 2025 12:36

மீண்டும் மொபைல் இண்டர்நெட் கட்டணம் ஓசைப்படாமல் அதிகரிக்க பட்டு விட்டது. மொபைல் சேவை நிறுவனங்கள், கட்டணம் மற்றும் அதன் validityஇல் மிக சாமர்த்தியமாக கொள்ளை அடிக்கிறார்கள். அரசு ஏதாவது செய்தால் தான் டிஜிடல் இந்தியா என்று பெருமை பட்டுக்கொள்ள முடியும்.


Sridharan Venkatraman
ஜூலை 01, 2025 13:00

புலம்பாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.


vivek
ஜூலை 01, 2025 14:44

எல்லாமே உனக்கு ஒசில வேணும்....அப்படிதானே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை