உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொறுப்பற்ற தன்மையின் முகம் ராகுல்: நிர்மலா சீதாராமன் காட்டம்!

பொறுப்பற்ற தன்மையின் முகம் ராகுல்: நிர்மலா சீதாராமன் காட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''ராகுலின் பொறுப்பற்ற தலைமை, அவரது கட்சியையும், நாட்டையும் காயப்படுத்துகிறது. ஆனால் அவருக்கு அது குறித்து எந்த கவலையும் இல்லை,'' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'தற்போது ரத்து செய்யப்பட்ட விவசாயச் சட்டங்களை நான் எதிர்த்த போது, அருண் ஜெட்லி என்னை மிரட்டினார். நான் அவரைப் பார்த்து, நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன் என்று கூறினேன்' என்றார்.ராகுல் குற்றச்சாட்டை அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி மறுத்தார். ராகுல் பேசியதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா பதிலடி கொடுத்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது:பொறுப்பற்ற தன்மைக்கு ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் தான் லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் தான். பொதுவாழ்வில் இருந்தவர்கள் குறித்து, அவர்கள் தற்போது இல்லாத நிலையிலும்கூட அவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீசுவது ராகுலுக்கு வழக்கமாகி விட்டது.மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பற்றிய அவரது பேச்சுக்கள் வெறுக்கத்தக்கவை. நம் நாட்டிற்கு ஒரு வலுவான எதிர்கட்சி தேவை. ராகுலின் பொறுப்பற்ற தலைமையால், அவரது கட்சியும், நாடும் காயப்படுகிறது. ஆனால் அவருக்கு அது குறித்து எந்த கவலையும் இல்லை.இவ்வாறு நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார்.ஜெய்சங்கர் கிண்டல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், ராகுலின் இந்தப் பேச்சை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், 'அருண் ஜெட்லி கடந்த 2019ம் ஆண்டு காலமானார். ஆனால், விவசாய சட்டம் 2020ம் ஆண்டு தான் அறிமுகம் செய்யப்பட்டது. மறைந்த தலைவர்களுன் பேசும் திறன் ராகுலிடம் இருக்கும் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது. ஒருநாள் தனது தவறுகளுக்கு விளக்கம் கேட்டு, நேருவையும் அவர் தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம்,' என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Tamilan
ஆக 03, 2025 00:18

மோடியும் சீதாராமனும் மட்டும்தான் பொறுப்பானவர்கள்


vivek
ஆக 03, 2025 06:29

திராவிட சொம்புகளுக்கு பொறுப்பானவர். வாழ்நாள் கொத்தடிமையாக இருப்பவர்


Rathna
ஆக 02, 2025 22:27

வெளி நாட்டு பாஸ்போர்ட்


சிட்டுக்குருவி
ஆக 02, 2025 22:25

பொறுப்பற்ற தன்மை இல்லை உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதில் சந்தேகமில்லை .ஏன் என்றால் எந்த ஒரு மனிதனும் தன் தாயை பற்றி யோ அல்லது தன் தாய் நாட்டை பத்தியோ மற்றவர்கள் அவதூறாக பேசுவதை பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் .ஆனல் இவரோ அமெரிக்கா ஜனாதிபதி தன் கட்டளைக்கு அடிபணியவில்லை என்ற காரணத்தினால் இந்திய பொருளாதாரம் இறந்தநிலையில் உள்ளதாக கூறியதற்கு தனது அளவில்லா ஆனந்தத்தை வெளிப்படுத்தினார் .சுமார் 60ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்து இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்காமல் கோமா நிலையிலேயே வைத்திருந்த நிலை மாறி கடந்த பதினோரு ஆண்டுகளில் உயிர்ப்பித்து ,புதிர்ப்பித்து பத்தாம் நிலையிலிருந்து ஐந்தாம் நிலைக்கு கொண்டுவந்திருப்பது மனநிலை பாதிப்பினால் அவர்கள் அறிந்திட முடியவில்லை .ஒரு ஜனநாயக அரசியலமைப்பில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி இரூ வருக்குமே நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு உண்டு .ரயிலும் தண்டவாளமும் மாதிரி .ஆளும்கட்சி ரயில் என்றால் எதிர்க்கட்சி தண்டவாளம் மாதிரி .தண்டவாளம் ரயிலை தடம் மாறாமல் பார்த்துக்கொள்ளும் . இதை புரிந்துகொள்ளும் தன்மை ராகுலிடம் இல்லை .அதுமட்டுமின்றி ஒரு நாட்டின் தலைமைப்பதவிக்கு ஆசைப்படுபவர் தன்னைப்பற்றிய முழுவிவரங்களையும் மக்கள் அறிய செய்யவேண்டும் .தன்னைப்பற்றிய மக்கள் அறியப்படாத ரகசியங்கள் எதுவுமே இருக்ககூடடது .அப்போதுதான் மக்களுக்கு தன மீது நம்பிகை பிறக்கும் .ஆனால் ராகுல் அவர்கள் தன்னை பற்றிய பல ரகசியங்களை மறைத்துவைத்திருப்பதேன் ? நீங்களும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியும் ரகசிய ஒப்பந்தம் போட்டதாக ஊடகங்களில் செய்திவந்தது .அதைப்பற்றி எதுவுமே மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை .அது என்ன மர்மம் .இதைப்பற்றி காங்கிரஸ் பார்ட்டி மக்களுக்கு அறிக்கை வெளி இடவேண்டும் .ராகுல் காந்தி இங்கிலாந்தில் தான் ஒரு இங்கிலாந்து பிரஜை என்று பதிவிட்டு Backops என்ற கூட்டுநிறுவனம் தனது 65% பங்களிப்புடன் தொடங்கி சுமார் 6 வருடங்கள் நடத்தியதாகவும் இணையதளம் மூலம் தெரியவருகிறது .There is also reference to an older Backops Limited company number 04874597, incorporated in August 2003 and dissolved around 2009, reportedly associated with Rahul Gandhi as a director and secretary, owning 65% of shares ~£1 shares. That older entity was reportedly a consultancy services company, later dissolved in 2009 Rahul Gandhi's former UK co-partner, Ulrik Mcknight 35% stake in Backops, is claimed to have later been involved with a company that received offset contracts linked to DCNS/Naval Group's Scorpène submarine deal signed 2011, after Backops was dissolved அது ஏன் மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்பதை ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸ் கட்சியோ தெளிவுபடுத்தவேண்டும் .அப்போதுதான் மக்களுக்கு உங்கள்மீது நம்பிக்கைபிறக்கும் .நாடு உங்களுக்கு உயரிய பதவியை கொடுக்க ஆவலுடன் காத்திருக்கின்றது .அதற்க்கு உங்களை தகுதி உள்ளவராக ஆக்கி கொள்ளுங்கள் .


K.n. Dhasarathan
ஆக 02, 2025 22:12

நிதி அமைச்சர் நிர்மலா அவர்கள் இவ்வளவு நாளாக எங்கிருந்தார் ? ரொம்ப பொறுப்பாக பேசுகிறாரே ? ட்ரம்ப் இவ்வளவு கேவலமாக பேசி, வரி விதித்து, நம்மை, நம் நாட்டை எல்லி நகை ஆடுகிறார், அதற்க்கு பதில் பேசணுமா ? இல்லையா ? அமெரிக்க தயவு இல்லாமல் உயிர் வாழ முடியாதா ? என்ன வரி போட்டாலும் எங்களால் சமாளிக்க முடியும் என்று பேசணுமா வேணாமா ? பிரதமர்தான் பதில் பேசவில்லை ,பயம், நீங்களாவது பேசணும் இல்லையா ? அவர் சொன்னார் என்று ரஸ்சியாவிடம் இருந்து ஆயில் வாங்குவதை நிறுத்திவிட்டீர்களே வெட்கமாயில்லையா ? அவர் என்ன சொன்னாலும் கேட்பீர்களா? இப்போ ஆயில் விலை அதிகமாயிடுமே எப்படி சமாளிப்பீர்கள் ? தேர்தல் நேரம் வேறு, நாட்டை அடமானம் வைக்கப்போகிறீர்கள். ஆனால் மக்கள் முட்டாள்கள் அல்ல, பொய் ஜே பி கூட்டத்தையே துரத்திவிடுவார்கள் , பட்டால்தான் தெரியும்.


நல்லவன்
ஆக 02, 2025 21:59

ஜெய்சங்கர் , நிர்மலா இருவரும் முதலில் தேர்தலில் போட்டியிட்டு வென்று பின்பு ராகுல் அவர்களை பற்றி கருத்து , கிண்டல் கூறலாம்


ஆரூர் ரங்
ஆக 02, 2025 22:15

சோனியா மன்மோகன் ஏன் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை? ராஜ்ய சபா நியமன எம்பி யாக இருந்த இந்திராவை காமராஜர் பிரதமாராக்கினார்?


வாய்மையே வெல்லும்
ஆக 03, 2025 00:17

பப்புவும் பப்பிம்மாவும் குல்லா எங்க ஜாஸ்தி தெரியுதோ அங்கே நின்று ஜெயிப்பது உலகறிந்த விஷயம். இவர்கள் வாழ்ந்தது வளர்ந்தது டில்லியில்.. ஆனால் போட்டியிடுவது தென்னிந்திய குல்லா மூர்க்கன்ஸ் ஏரியாவில் தான் இவங்க ஆட்டத்தை ஆடுவார்கள், வோட்டுப்பிச்சை குல்லா தவிர எவனும் போடமாட்டான் என்பது பப்பு பப்பிம்மா க்கு நல்லாவே தெரியும். இதுல வீரவசனம் எதுக்கு நல்லவன் பாய்மாரே ?


N Sasikumar Yadhav
ஆக 03, 2025 09:09

திரு நல்லவரே நிர்மலா சீதாராமன் ஜெய்சங்கர் தேர்தலில் நின்று ஜெயிக்க வேண்டுமென்றால் உங்கள மாதிரியான கோபாலபுர கொத்தடிமைகள் இலவசம் ஓஷி என வாங்கி விஞ்ஞானரீதியான ஊழல்வாதிகளுக்கு ஓட்டுப்போடாமல் நல்லவர்களுக்கு ஓட்டுப்போட பழகவேண்டும் .


ஆரூர் ரங்
ஆக 02, 2025 21:56

சும்மா சொல்லக் கூடாது. டிரம்ப் அமெரிக்காவின் ராகுல். ராகுல் இந்தியாவின் டிரம்ப். கலக்குறாங்க


மனிதன்
ஆக 02, 2025 21:45

ஆமாமா., இவங்க பொறுப்ப பத்திதான் இந்தியாவே பேசுதே...அந்த பொறுப்பற்றவர்கூட இல்லையென்றால் நாட்டை என்றைக்கோ விற்று ஏப்பம் விட்டு இருப்பீர்கள்... தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றிபெற்று நாடே உங்களுடன் இருப்பதுபோல் ஒரு மாயை ஏற்படுத்துகிறீர்களே அது என்றைக்கும் நிலைக்காது...ஆரம்பத்தில் நான் கூட மாற்றம் வேண்டும் என்று நினைத்தவன்தான்... ஆனால் இப்போது??? நீங்கள் சொல்வதை சுய இந்தனை இல்லாத சங்கிகள் வேண்டுமானால் நம்புவார்கள் ஆனால் மக்கள் உங்களை நன்றாக கண்டுகொண்டார்கள்..


Shankar
ஆக 02, 2025 21:36

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் கிண்டல் சூப்பர்.


Narayanan Muthu
ஆக 02, 2025 21:23

பொறுப்பான நிர்மலாதான் இந்திய மக்களின் ரத்தத்தை வரி பயங்கரவாதம் மூலம் உறிஞ்சி குடிக்கிறார். எத்தனை மக்களின் சாபம் இவரை சும்மா விடாது.


vivek
ஆக 03, 2025 06:30

உனக்கும் உன் குடும்பத்திற்கும் எட்டவில்லையா


அப்பாவி
ஆக 02, 2025 20:54

பாஞ்சி லட்சம் கணக்கு போட்டு குடுத்த நிதியமைச்சர். நிர்மலாவுக்கும், ஜெய்சங்கருக்கும் தெரியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை