உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரலாறு எதுவுமே தெரியாமல் விடுதலைப் போராட்ட வீரர்களை பற்றி பேசுவதா: ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

வரலாறு எதுவுமே தெரியாமல் விடுதலைப் போராட்ட வீரர்களை பற்றி பேசுவதா: ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதுடில்லி: இந்தியாவைப் பற்றிய வரலாறு, புவியியல் என எதுவுமே தெரியாமல், விடுதலைப் போராட்ட வீரர்களை பற்றி தாறுமாறாக பேசுவதா என்று, காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், அவருக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.காங்., முன்னாள் தலைவரான ராகுல், கடந்த 2022ல் 'பாரத் ஜோடா யாத்திரை' சென்றபோது, மஹாராஷ்டிராவின் அகோலாவில் சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை, பிரிட்டிஷாரின் பணியாள் என்றும், அதற்காக பிரிட்டிஷாரிடம் இருந்து பென்ஷன் பெற்றார் என்றும் விமர்சித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ql8phihh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, ராகுல் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி, உ.பி.,யை சேர்ந்த நிருபேந்திர பாண்டே வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யவும், அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் மேல் முறையீடு செய்தார். அதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, மன்மோகன் ஆகியோர் அமர்வு முன் நேற்று நடந்தது. ராகுல் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். அப்போது, ராகுலுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.நீதிபதி தீபங்கர் தத்தா, 'இந்தியாவின் வரலாறு, புவியியல் பற்றி எதுவுமே தெரியாத நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி நீங்கள் இப்படி தாறுமாறாக பேசுவது சரியல்ல. ஒரு அரசியல் கட்சியின் தலைவராக, உங்களைப் போன்ற நிலையில் இருக்கும் ஒருவர், ஏன் இப்படி தேவையற்ற பிரச்னைகளை உருவாக்குகிறீர்கள்' என்று கேள்வி எழுப்பினார்.நாட்டுக்கு சுதந்திரம் பெற்று கொடுத்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராக இப்படி பேசக்கூடாது என்றும் நீதிபதிகள் ராகுலுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.நீதிபதி தத்தா கூறுகையில், 'மீண்டும் ஒருமுறை ராகுல் இப்படி பேசினால், ஒப்புதல் அளிப்பது என்ற பேச்சுக்கே இடம் இன்றி, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும்' என்றும் வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.'நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நடத்தும் முறை இதுவல்ல. அவர்கள் நமக்கு சுதந்திரம் பெற்று கொடுத்துள்ளனர். 'மகாராஷ்டிராவில் சாவர்க்கர் கடவுளைப் போன்று வழிபடப்படும் நிலையில், ராகுல் அப்படி பேச வேண்டிய அவசியம் என்ன' என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். 'பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், மோஸ்ட் ஒபிடியன்ட் சர்வன்ட் என்று ஆங்கிலத்தில் சாவர்க்கர் குறிப்பிட்டுள்ளதை ராகுல் விமர்சனம் செய்துள்ளார். இது பற்றியும் ராகுலின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். 'மகாத்மா காந்தி கூட பிரிட்டிஷருக்கு எழுதிய கடிதத்தில் உங்கள் உண்மையுள்ள பணியாள் என்று குறிப்பிட்டதை உங்கள் கட்சிக்காரர் அறிவாரா' என்று நீதிபதி கேட்டார். 'ராகுலின் பாட்டியான இந்திரா எழுதிய கடிதம் ஒன்றில் சாவர்க்கரை விடுதலைப் போராட்ட வீரர் என்று குறிப்பிட்டதை ராகுல் அறிவாரா' என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.மேலும் நீதிபதிகள் கூறியதாவது: அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி பொறுப்பற்ற முறையில் பேசுவதா? சுதந்திர போராட்ட தலைவர்களை இழிவு படுத்துவதை அனுமதிக்க முடியாது. காந்தியை பிரிட்டிஷாரின் வேலைக்காரர் என ராகுல் கூறுவாரா? நம்மால் ஏற்க முடியுமா? வரலாற்றை தெரிந்து கொள்ளாமல், இதுபோன்று இனிமேல் பேசக் கூடாது.கோல்கட்டாவில் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதும் சக நீதிபதிகள், தங்கள் கீழ்ப்படிதல் உள்ள ஊழியர் என்று குறிப்பிடுகின்றனர். அப்படி சொல்வதாலேயே, யாரும் வேலைக்காரர் ஆகிவிடுவதில்லை. நாளை இன்னொருவர் மகாத்மா காந்தி பிரிட்டிஷாரின் வேலைக்காரன் என்று கூற முற்படுவார். நீங்கள் இதுபோன்ற செயல்களைத் தான் ஊக்குவிக்கிறீர்கள் என்றும் நீதிபதி தீபங்கர் குறிப்பிட்டார்.விசாரணை முடிவில், இந்த வழக்கில் ராகுலுக்கு எதிரான சம்மனை ரத்து செய்ய மறுத்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு பற்றி விசாரணை நடத்திய கீழமை நீதிமன்றம், 'ராகுல் சமூகத்தில் வெறுப்பையும் விரோதத்தையும் பரப்புவதாக' கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ராகுலுக்கு மேலும் சிக்கல்!

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், விசாரணைக்காக ராகுல் மே 9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என புனே நீதிமன்றம் சம்மனில் குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 69 )

R SRINIVASAN
மே 03, 2025 18:26

நேருவின் அமைச்சரவையில் ராணுவ மந்திரியாக இருந்த V K கிருஷ்ணமேனன் இந்தியாவின் ராணுவ ரகசியங்களை சீனாவுக்கு தெரியப்படுத்தியதாகவும் அதன் பெயரில் சீனா 1962-ல் இந்தியாவின் மீது படையெடுத்து அருணாச்சல பிரதேசத்தின் மீது படையெடுத்து 10000 SQ.KM நிலப்பரப்பை தன வசப்படுத்திக்கொண்டதாகவும் ஒரு செய்தி அந்த நாளில் சொல்லப்பட்டது .நேரு அந்த நிலப்பரப்பை மீட்க எந்த முயற்சியும் எடுக்காமல் அது தரிசு நிலம்தான் போனால் போகட்டும் என்று சொன்னதாகவும் ஒரு செய்தி இன்றளவும் உலவிக்கொண்டிருக்கிறது. மேலும் வல்லபாய் படேல் அவர்கள் பாகிஸ்தான் இந்தியாவை விட்டு பிரிந்த பொழுது அன்று ஏற்பட்ட போரில் படேல் அவர்கள் பாகிஸ்தான் வசமுள்ள பகுதியையும் மீட்டதாகவும் ஒரு செய்தி உலாவியது. ஆனால் நேருவோ தேவையில்லாமல் ஐநா சபைக்கு எடுத்து சென்றதாகவும் இதன் காரணமாக இன்றுவரை காஷ்மீர் பிரச்னைக்கு முற்று புள்ளி வைக்கமுடியாமல் இந்தியா அரசு திணறுகிறது என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றியும் உச்ச கோர்ட் விசாரணை செய்து நட்டு மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும்.


TRE
ஏப் 27, 2025 11:52

வக்ப் சட்ட திருத்தம் பிஜேபிக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்


rajendran abudhabi
ஏப் 27, 2025 08:42

Well said Judge. Rahul is an unmatured boy. Not fit for a Leader. He has to learn the History first as Judge mentioned. It is a great blow and lesson to Rahul. Hope he will not talk any rubbish things in future especially when visiting Foreign countries.


M R Radha
ஏப் 27, 2025 08:00

காந்தி என்ற பெயரை திருடி இந்தியாவை சுரண்டி தின்ற திருட்டு வரலாறு மட்டும்தான் தெரியும்


Gopal
ஏப் 27, 2025 07:24

ஒரு சுய அறிவு அற்ற ராகுல் எதிர் கட்சி தலைவராக இருப்பது நாட்டுக்கு கேவலம். ஜட்ஜ் சொன்ன மாதிரி வரலாறு, புவியல் என்று ஒன்னும் தெரியாத ஒரு அரசியல் கட்சியின் தலைவர். மட்டம்


Balaji Bakthavathsal
ஏப் 27, 2025 07:14

எதிர்கட்சி ஆதரிக்கும் தலைவர்களை தூற்றுவதும், அவர்கள் தூற்றும் தலைவர்களை ஆதரிப்பதும் அரசியல் கட்சிகளுக்கு வேலையாக போய்விட்டது.


ramani
ஏப் 27, 2025 05:56

இவரை போன்றவர்களை அவர் தேசத்திற்கே அதாவது இத்தாலிக்கே அனுப்ப வேண்டும்


ராஜ்குமார்
ஏப் 27, 2025 05:54

அண்ணே தண்டனை கடுமையாக அதுவும் துரிதமாக இருந்தால்தான் குற்றவாளிகள் பயப்படுவார்கள். நீங்கள் எல்லாம் நல்லா சொல்றீங்க ஆனா தண்டனை குடுக்க மற்றெனுங்கோ. ஜோக்கா இருக்கு சாமியோ


SPSrinivasan
ஏப் 26, 2025 21:39

Rahul was catapulated to a leadership position because of his Nehru clanand llacks knowledge of any subject,logic,or cintrol over words.He is damaging the GOP and the nationsi nterests


Ganesun Iyer
ஏப் 26, 2025 21:34

ஜயா, ஜட்ஜ் அவர்களே ஒரே ஒரு முறை இவரோட எம் பி பதவியை பறித்து இந்திய கான்ஸ்டிட்யூஷன் மேல் பதவி பிரமாணம் எடுக்கும் யாராக இருந்தாலும், நாட்டுக்கு எதிராக பேசினால் இதுதான் தண்டனை என்ற பயத்தை உண்டுபண்ணும் விதத்தில் எடுத்துகாட்டாக செயல் படுங்களேன்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை