உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆபாச நடனம்; பாரம்பரிய அர்ச்சகர்கள் கண்டனம்

ஆபாச நடனம்; பாரம்பரிய அர்ச்சகர்கள் கண்டனம்

மதுரை: ''சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோவில் அர்ச்சகர்கள், அனைத்து ஜாதி அர்ச்சகர்கள் பயிற்சி பள்ளியில் படித்தவர்கள். அதை மறைத்து ஒட்டுமொத்த அர்ச்சகர்கள் சமூகத்தின் மீது சேற்றை வாரி இறைப்பதா'' என மதுரை மீனாட்சி அம்மன் உட்பட கோவில்களின் பாரம்பரிய அர்ச்சகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அனைத்து ஜாதி அர்ச்சகர் பள்ளியில் படித்தவர்கள்

அவர்கள் கூறியதாவது: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோவில் அர்ச்சகர்கள் சிலர், ஆபாச நடனம் ஆடியது, பெண்களுக்கு ஜன்னல் வழியே விபூதி அடித்தது போன்ற செயல்களை, பாரம்பரிய அர்ச்சகர்களாலும், பக்திநெறியோடு ஆன்மிகத்தை நாடியவர்களாலும் ஏற்க முடியவில்லை.பாரம்பரிய அர்ச்சகர்களை தொடர்பு கொண்டு விசாரித்ததில், யாருக்குமே இவர்களை அடையாளம் தெரியவில்லை. இவர்கள், கும்பாபிஷேக பணிகளுக்கு வந்தவர்கள். பாரம்பரிய அர்ச்சகர்கள் இல்லை. தமிழக அரசின் அறநிலையத்துறை நடத்தும் அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியில் பயின்றவர்கள். பயிற்சியில் இருப்பவர்கள்.இதை மறைத்து விட்டு ஒட்டுமொத்தமாக அர்ச்சகர்கள் சமூகத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் வேலையில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது.பாரம்பரிய முறைப்படி அர்ச்சகர்கள் பயிற்சிக்கு வருபவர்கள், வேத ஆகம பாடசாலைகளில் மிகக் குறைந்த வயதிலேயே சேர்க்கப்பட்டு விடுவர். கிட்டத்தட்ட பள்ளிகளில் தொடக்கல்வி முடிந்து உயர்நிலை பள்ளிக்கு செல்லும் வயதில் அதை தவிர்த்து விட்டுத்தான் அவர்கள் பாடசாலைகளில் சேர்க்கப்படுவர்.பதின்ம வயதுக்கு முன்னரே அவ்வாறு பாடசாலைகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு இயற்கையாகவே வெட்கம், பயம் போன்றவை இருக்கும். கூடுதலாக அவர்களுக்கு வழங்கப்படும் ஒழுக்கம் சம்பந்தமான பயிற்சிகள் காரணமாக பதின்ம வயதை கடந்தாலும் கூட, அவர்களுக்கு உளவியல் ரீதியாக வெட்கமும் பயமும் வாழ்நாள் முழுதும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அது தான், இது போன்ற செயல்களின் பக்கம் அவர்கள் செல்லாமல் தடுக்கும் தற்காப்பு ஆயுதம்.அதை, அனைத்து ஜாதி அர்ச்சகர்கள் பயிற்சிப்பள்ளிகளில் பயின்றவர்கள், பயில்பவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. காவி வேட்டி, துண்டு, குடுமி, விபூதி, திருமண் பட்டை, கழுத்தில் ருத்ராட்சம் போன்ற 'புற அழகுகள்' எல்லாம், யார் அர்ச்சகர் வேடம் தரித்தாலும் ஒன்று போலத்தான் இருக்கும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

KRISHNAVEL
ஜூலை 04, 2025 16:14

இந்து நாத்திக சித்தாந்தம் தனது திட்டங்களை மிகசரியாக செய்துகொண்டு இருக்கிறார்கள் , சுயலாமான இந்துக்கள் காசுக்காக ஓட்டையும் மானத்தையும் விலை பேசி விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்


Pascal
ஜூலை 04, 2025 10:41

ஏன் அவர்களும் மனிதர்கள் தானே. அதிக வேலைப் பளு காரணமாக இவ்வாறு செய்திருக்கலாம். அதனை பெருந்தன்மை யாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஏன் வரவில்லை. உடனே பழியை தூக்கி அடுத்தவன் மேல் போடுவது தர்மம் அல்ல. இனி நடக்காமல் பார்த்துக் கொள்வதுடன் ஆடுவதை யாராவது வீடியோக்கள் எடுக்கிறார்களா என்பதை கவனத்தில் கொள்ளவும்.


Rathna
ஜூலை 03, 2025 12:33

சிவாச்சாரியர்களுக்கு கல்வி கூடத்திலும், வீட்டிலும், கோவில்களிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பரம்பரையாக மற்றும் கல்வி மூலம் வருவது. இது பல ஆயிரம் வருடங்களாக நடக்கும் குடும்ப பின்னணி. அதை சில காளான்கள் 6 மாதத்தில் பெற வாய்ப்பில்லை. இறைவனிடம் பக்தியும், பயமும் வேண்டும். குடியும் சிகரெட்டும், கேவலமான ஆட்டமும் பெற்று தராது.


Sundaresan S
ஜூலை 02, 2025 11:07

வேலைக்கான தகுதி ஓரங்கட்டப் பட்டது. இன சுழற்சி முறை நியமனங்கள் அனைத்து பதவிகளுக்கும் பொருந்துமா?


gajendran G
ஜூன் 30, 2025 11:36

சரி ஒன்னு செய்வோம் தமிழ் நாடு முழுவதும் உள்ள பார்களைப் பார்வையிடுவோம்


Bhaskaran
ஜூன் 30, 2025 11:13

நீங்கள் சொல்வது உண்மை ஆனால் ......


Nagasamy
ஜூன் 29, 2025 21:10

யார் எதை செய்யவேண்டும் அவர்கள்தான் அதனைச் செய்யவேண்டும். சனாதனம் புறிந்தோற்கு சங்கடமில்லை.


c.mohanraj raj
ஜூன் 29, 2025 18:48

அரசுக்கு சம்பந்தமில்லாமல் எப்படி போகும் துறை அரசின் துறை பயிற்சி கொடுத்தது அரசு சார்ந்த நிறுவனங்கள் கொள்கை திராவிடம் மாடல் விளங்குமா இது


எஸ் எஸ்
ஜூன் 29, 2025 18:23

இந்த திராவிட மாடல் அர்ச்சகர்களின் சங்கத்திற்கு தலைவர் அரங்கநாதன் என்னும் பெரியாரிஸ்ட்.... விளங்குமா?


theruvasagan
ஜூன் 29, 2025 17:46

காக்காயை புடுச்சு குயில் மாதிரி கூவு என்றால் நடக்குமா. அதுவும் திராவிட மாடல் காக்கா.