பொதுமக்களுக்கு இடையூறு : 2 பேர் கைது
திருக்கனுார் : காட்டேரிக்குப்பத்தில் மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தை புதுக்குப்பம் தனியார் ஒயின்ஷாப் அருகே பொது இடத்தில் மது அருந்திக் கொண்டு, அவ்வழியாக சென்ற பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட தமிழக பகுதியான வானுார் பகுதியை சேர்ந்த சரத்குமார், 39; விஜய், 26; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.