உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பீகார், உ.பி., மாநில பா.ஜ., நிர்வாகிகள் சந்திப்பு

 பீகார், உ.பி., மாநில பா.ஜ., நிர்வாகிகள் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., சார்பில், உத்திரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த நிர்வாகிகளின் சந்திப்பு கூட்டம் சற்குரு ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு, மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஜெயின் வரவேற்றார். கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் பாபு நோக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக உ.பி., கோரக்பூர் தொகுதி எம்.பி., ரவி கிஷன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஜெயந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் பீகார் மற்றும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு, புதுச்சேரியில் இருந்து பீகாரருக்கு ரயில் சேவை வழங்க வேண்டும். புதுச்சேரியில் சிறப்புமிக்க வணிக வளாகம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். அதனை கேட்ட எம்.பி., ரவிகிஷன் பாராளுமன்ற கூட்டத்தொடரில் ரயில்வே அமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி