உள்ளூர் செய்திகள்

கொத்தனார் தற்கொலை

பாகூர்: சோரியாங்குப்பம், திடீர் குப்பத்தைச் சேர்ந்தவர் பழனி, 40; கொத்தனார். இவருக்கும் கண்ணியம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர்.குடிப்பழக்கம் உடைய பழனி, சரிவர வேலைக்கு செல்லாமல் கடந்த சில தினங்களாக மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனை மனைவி கன்னியம்மாள் கண்டித்ததால், மனமுடைந்த பழனி வீட்டின் பின்புறம் உள்ள சவுண்டல் மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பழனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ