உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் வரும் 4ம் தேதி பவுர்ணமி தீப விழா  

 பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் வரும் 4ம் தேதி பவுர்ணமி தீப விழா  

புதுச்சேரி: புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், இரும்பை டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கார்த்திகை மாத பவுர்ணமி தீப விழா வரும் 4ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, காலை 10 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்பாள், ராஜமாதங்கி, வாராகி, பைரவர் புறப்பாடு, மகாதீபம் ஏற்றுதல் நடக்கிறது. தொடர்ந்து, பவுர்ணமி நவாவர்ண பூஜை, தீபாராதனை, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேர் உள்புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ