உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்
புதுச்சேரி: தேர்தல் நடத்தை விதிகளின்படி உரிமம் பெற்ற துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைக்க தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. தேர்தல் முடியும் வரை புதிய துப்பாக்கி உரிமம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும், ஏற்கனவே துப்பாக்கி உரிமம் பெற்று, வைத்திருப்பவர்கள் தங்கள் உரிமம் பெற்ற துப்பாக்கியை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களின் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டவுடன் மீண்டும் துப்பாக்கிகளை பெற்றுக் கொள்ளலாம். இதில், தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பிற்காக உரிமம் பெற்று, ஆயுதங்கள் வைத்திருப்போருக்கும், துப்பாக்கி சுடுதல் சங்கங்கள், விளையாட்டு வீரர்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியிடும் பங்கு பெற உரிமம் பெற்றவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில், மொத்தம் 177 துப்பாக்கிகளுக்கு உரிமம் பெறப்பட்டுள்ளன. வங்கிகள், விளையாட்டுகளை தவிர்த்து, உரிமம் பெற்ற வைத்திருந்த 94 துப்பாக்கிகள் போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.