உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சனிஸ்வரபகவான் கோவிலில் தமிழிசை சுவாமி தரிசனம்

 சனிஸ்வரபகவான் கோவிலில் தமிழிசை சுவாமி தரிசனம்

காரைக்கால்: திருநள்ளாறு சனிஸ்வரபகவான் கோவிலில் முன்னாள் கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார். காரைக்கால் திருநள்ளாறு உலக பிரசித்திபெற்ற தர்பார்னேஸ்வரர் கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக சனிபகவான் தனிச்சன்னதியில் அருள்பலித்து வருகிறார். இதனால் பல்வேறு பகுதியிருந்து பக்தர்கள் வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் திருநள்ளாறு கோவிலுக்கு வருகைப்புரிந்த புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை செளந்தரராஜனை கோவில் நிர்வாக சார்பில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை சட்டநாத தம்பிரான் சுவாமிகள் வரவேற்றார். சுவாமிகளுக்கு தரிசனம் செய்த பின்னர் சனிபகவான் சன்னதியில் எள் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி